#BREAKING : எடப்பாடியார் என்றும் முதல்வர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்

எடப்பாடியார் என்றும் முதல்வர் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளகர்ளை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் … Read more

பிளாஸ்மா தானம் கொடுக்க ஆசைதான் ஆனால் முடியவில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ

கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து. கொரோனாவிலிருந்து மீண்டுவந்த அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்  செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம் என்று கூறினார். அதன் பின் அவரிடம் நீங்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என கேள்வி எழுப்பப்பட்டது, அவர் பிளாஸ்மா தானம் கொடுக்க எனக்கு ஆசைதான் ஆனால் பிளாஸ்மா தானம் செய்ய 50 … Read more

வாய்க்காலில் விழுந்த அதிமுகவினர்… மயிரிழையில் தப்பிய செல்லூர் ராஜு..!

 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. மதுரையின்  சிறப்பை காட்டும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கவுள்ள  ரவுண்டானாவில் கபடி வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த  ரவுண்டானாவை திறந்துவைக்க  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வந்திருந்தார். விழாவை தொடங்கி பிறகு  செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருக்கும்போது அவர் நின்று கொண்டிருந்த ரவுண்டானா திடீரென இடிந்து விழுந்தது. இதில் அருகிலிருந்த சாக்கடையில் அதிமுக கட்சியை சேர்ந்த … Read more

நகரும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை- பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

நகரும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி 17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. இதனைத்தொடர்ந்து நேற்றும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.அப்பொழுது அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், தமிழகத்தில் பகுதி … Read more

திராவிட கட்சிகள் என்றால் இரண்டு தான்,மற்ற கட்சிகள் சில்லறைகள் – அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் என்றால் இரண்டு தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகள் சில்லறைகள் என்று  கூறியுள்ளார். ஜனவரி 17 ஆம் தேதி எம்ஜிஆரின் 103 -வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் பல இடங்களில் கொண்டாப்பட்டு வருகிறது.அந்த வகையில் இதன் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசினார். … Read more

‘வெட்கப்படாமல் வாக்காளர்கள் காலில் விழுந்துவிடவேண்டும்!’ – அமைச்சர் செல்லூர் ராஜுவின் ருசிகர பேச்சு!

மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய செல்லூர் ராஜூ   வாக்காளர்களிடம் சென்று எனக்கு ஒட்டு போடுங்க , ஆளுங்கட்சி நாங்க , கூச்சப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்க வேண்டும் மதுரையில் திமுக மற்றும் அமமுக கட்சியில் இருந்து விலகிய 500 மேற்பட்டவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீண்டும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ … Read more

 2 படங்கள் வருது ,அதன் அந்த பரபரப்பு பேச்சு-ரஜினி குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து

2 படங்கள் வரவிருப்பதால் ரஜினிகாந்த்  பரபரப்பாக பேசுவது வழக்கம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று கூறினார்.இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில்,தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏதும் இல்லை, ரஜினிக்கு இரண்டு படம் வெளிவர இருப்பதால் பரபரப்பாக பேசி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஊழல் குறித்து நேருக்குநேர் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜூ

ஊழல் குறித்து நேருக்குநேர் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாங்குநேரி ரெட்டியார்பட்டியில்  வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஊழல் குறித்து நேருக்குநேர் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என்று கேள்வி … Read more

முதல்வரும், துணை முதல்வரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சியை நடத்தி வருகின்றனர் – அமைச்சர் செல்லூர் ராஜூ

முதல்வரும், துணை முதல்வரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சியை நடத்தி வருகின்றனர் என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சியை நடத்தி வருகின்றனர் .தமிழக அரசின் திட்டங்களை எந்த எதிர்க்கட்சிகளாலும் குறை சொல்ல முடியாது என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் பாராட்ட வேண்டும்-அமைச்சர் செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி ஐ.நா.வில் புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி பேசியது தமிழகத்திற்கு பெருமை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்  ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசினார்.அவர் பேசுகையில் ,கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் மோடி … Read more