Breaking news :மே 3 ம் தேதி தூத்துக்குடி வருகிறார் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ..!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென கடந்த மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற மக்கள் மீது தமிழக காவல்துறை தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர் . 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்திக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மே 3-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார்.