மழை காரணமாக 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

தொடர் மழை காரணமாக 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே திண்டுக்கல், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை எதிரொலி- நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தென்காசியில் உள்ள அனைத்து  பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கி விட வேண்டாம் எனவும் தொடர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரியில் … Read more

இன்று இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Schools - holiday

தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளான இன்று, கன்னியாகுமரி தினம் கொண்டாட படுகிறது. இன்று 67-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளை முன்னிட்டு  இன்று  மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாமக்கல் தாலுகாவுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று (நவம்பர் 1ம் தேதி) விடுதலை நாள் கொண்டாட்டம் மற்றும் நாளை … Read more

மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று பள்ளிகள் இயங்கும்..!

கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை … Read more

குஷியில் மாணவர்கள்..! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக, சமீப நாட்களாக சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம்,  திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த  மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

#Breaking : திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ளுமாறும்அறிவுறுத்தியுள்ளார்.

#Holiday : சென்னை, வேலூர் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை..!

மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை தமிழகத்தில் சமீப நாட்களாக மாண்டஸ் புயலை தொடர்ந்து சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிப்பு..!

சென்னையில்  இன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு. சென்னையில் இன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாள் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.  இன்று ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு … Read more

கனமழை – இன்று இந்த மாவட்டகளில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக விருதுநகர், தேனி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் பள்ளி கல்லூரிகளுக்கும், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

புதுச்சேரி காரைக்காலில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.