கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – சயானிடம் இன்றும் தீவிர விசாரணை!

கோடநாடு வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் … Read more

#BREAKING: கோடநாடு வழக்கு – சயானிடம் மீண்டும் விசாரணை!

கோடநாடு வழக்கு தொடர்பாக சயானிடம் இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை.  கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சயானிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரிக்கப்படும் சயான் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவ இவரிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் … Read more

சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கோடநாடு  எஸ்டேட் காவலாளியை கொலை செய்த கும்பல் அங்கு கொள்ளையில் ஈடுபட்டது.இந்த கொலை, கொள்ளைச் சம்பவம்  தொடர்பாக  சயன், மனோஜ், தீபு  உள்ளிட்ட  10 பேரை கைது செய்யப்பட்டனர் . பின்னர்  சயன், மனோஜ் உள்ளிட்டோர்  ஜாமீனில் வெளியே வந்தனர்.இந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தமிழக  முதலமைச்சர் பழனிசாமியை தொடர்புப்படுத்தி இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது … Read more