சசிகலாவை சாதராண வார்டுக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு!

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதால் ஐசியூ வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற பெங்களூரு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பெங்களூர் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவ கல்லூரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் சசிகலாவிற்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் அளவு 3 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், சசிகலாவுக்கு கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் … Read more

#BREAKING: சசிகலா உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூர் சிறையில் இருந்த சசிகலாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவை தாமே உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் மருத்துவமனை … Read more

சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசிக்கு கொரோனா உறுதி

சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதியானது. சசிகலா உடன் பெங்களூரு சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனையில் அவர்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உறவினர் இளவரசி சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இளவரசி அடுத்த மாதம்  5-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில் ஒரு வாரம் கழித்து இளவரசியும் … Read more

சசிகலா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர்

சசிகலா நலமாக இருக்கிறார் என்று விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா கூறுகையில், சசிகலா நலமாக இருக்கிறார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவருக்கான கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன.7அல்லது 10 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் … Read more

சசிகலா சுய நினைவுடன் இருக்கிறார் – மருத்துவமனை அறிக்கை.!

பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 98-ஆக இருந்த ஆக்சிஜன் அளவு 95-ஆக குறைந்து இருப்பதாக கூறப்பட்டது. மேலும், சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் இருப்பதால், தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சசிகலா உடல்நிலை … Read more

சசிகலாவுக்கு தீவிர நிமோனியா காய்ச்சல் – மருத்துவமனை நிர்வாகம்.!

சசிகலாவுக்கு கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தீவிர நிமோனியா காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை 98-ஆக இருந்த ஆக்சிஜன் அளவு இன்று 95-ஆக குறைந்து இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது. மேலும், சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் இருப்பதால், தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதனிடையே, ஐசியூவில் … Read more

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி.!

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சி.டி. ஸ்கேனை அடுத்து இன்று செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே, நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் … Read more

சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று – விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.!

ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, கொரோனா பரிசோதனையில், அவருக்கு நெகட்டிவ் … Read more