ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நகரத்தில் உக்ரைன் தாக்குதல் – 13 பேர் பலி!

Ukraine shells Russian

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் நகரம் மீது உக்ரேனியப் ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்ததாக டொனட்ஸ்க் நகர நிர்வாகத் தலைவர் டெனிஸ் புஷிலின் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைனில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டொனட்ஸ்க் நகரின் மேயரின் கருத்துப்படி, உக்ரேன் ராணுவம் இங்கிருக்கும் கடைகள் அமைந்துள்ள பரபரப்பான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார். தாக்குதலை … Read more

ஜப்பானை தொடர்ந்து வடகொரியா மற்றும் ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை!

tsunami warning

ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோன்ஷு அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். டோக்கியோ, காண்டோ உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று ஜப்பானின் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை (21 நிலநடுக்கங்கள்) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை … Read more

மீண்டும் தாக்குதல்…உக்ரைன் மீது ஏவுகணை வீசிய ரஷ்யா..18 பேர் உயிரிழப்பு.!

Russian Missile Strike

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா உக்ரைனுடனான போரின் போது கடந்த வியாழன் இரவும் வெள்ளிக்கிழமையும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளது. ரஷ்யா, உக்ரன் மீது சுமார் 122 ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரோன்களை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது குறைந்தது 18 பேர் பலியாகியதாகவும், 86 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும் 27 ஷாஹெட் வகை ட்ரோன்களையும் ஒரே … Read more

உக்ரைன் நகரத்தை நோக்கி முன்னேறும் ரஷ்ய படைகள்.. மீண்டும் தீவிரமடையும் போர்!

Russian forces

ரஷ்யப் படைகள் உக்ரேனிய நகரத்தை நோக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில்,  இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது … Read more

உக்ரைனின் அருங்காட்சியகம் மற்றும் துறைமுகம். மீது ரஷ்யா தாக்குதல்..8 பேர் காயம்!

Russian strikes - Ukraine Odesa

உக்ரேனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசா நகரம் மீது ரஷ்யா ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் சுமார், 20 அடுக்கு மாடி கட்டிடங்கள்  மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 124 ஆண்டுகள் பழமையான ஒடேசா நுண்கலை அருங்காட்சியகமும் சேதமடைந்ததுள்ளது. அது மட்டும்மல்லாமல், ஒரு தானிய கிடங்கு மற்றும் தானியங்களுடன் கூடிய லாரிகள் … Read more

ரஷ்யாவில் ஆட்சி கவிழ்ப்பு..விளாடிமிர் புதின் இறந்துவிட்டாரா.? கிரெம்ளின் மாளிகை விளக்கம்.!

vladimir putin

கடந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக ஜெனரல் எஸ்.வி.ஆர் என்ற டெலிகிராம் சேனல் தகவல் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று விளாடிமிர் புதின் மாஸ்கோவிற்கு வடக்கே வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 8:42 மணியளவில் உயிரிழந்தார் என்று செய்தியை வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. புதின் இறந்துவிட்டதாக செய்தியை பரப்பிய டெலிகிராம் சேனல் ரஷ்யாவில் ஆட்சி கவிழ்க்க சதி நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த  சேனலில் வெளியான … Read more

அணுகுண்டு சோதனை நடத்திய ரஷ்யா! திடீர் முடிவால் பரபரப்பு…அடுத்தது என்ன?

Russia putin and Nuclear Bomb

உக்ரைன் மற்றும் காசாவில் போர் நடைபெற்றுவரும் நிலையில் ரஷ்யா அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி சோதனைக்கு எதிராக ரஷ்யா, உலக அளவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அணு ஆயுதங்களை தயாரிப்போம் எனவும், ஆனால் அணு ஆயுத சோதனை செய்ய போவதில்லை என்று ஒப்பந்தம்  செயப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்யும் மசோதாவிற்கு ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தற்போது, அந்த ஒப்பந்தத்தின் … Read more

உக்ரைன் உணவகத்தில் திடீர் தாக்குதல்: இரண்டு பேர் உயிரிழந்தனர்!

ukraine

உக்ரைன் தெற்கு மைகோலேவ் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக மைகோலேவ் கவர்னர் விட்டலி கிம், செய்தியார்களிடம் உறுதி செய்துள்ளார். நேற்று இரவு 8:30 மணிக்கு மைகோலேவ் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தை ரஷ்ய  ஏவுகணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் மொத்தமும் இடிந்துள்ளது. இதனையடுத்து, மீட்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்ற நிலையில், இந்த  இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த … Read more

சூப்பர் மார்க்கெட்டில் சீறிப்பாய்ந்த ராக்கெட்.. 51 பேர் உயிரிழப்பு..!

#Ukraine

உக்ரைனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில்  கார்கிவ் பகுதியில் உள்ள ஹ்ரோசா கிராமத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 19 மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பிறகு கார்கிவ்வில்  நடந்த மிக மோசமான தாக்குதல் இது … Read more

உக்ரைனுக்கு 1000 மெட்டல் டிடெக்டர்களை வழங்கும் பிரிட்டன்..!

உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்ற 1000 மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் செயலிழக்கச் செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பாதிப்படைந்த தங்களது சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை சீரமைக்கும் முயற்சியில் உக்ரைன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதற்காக 1000க்கும் மேற்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் கண்ணி வெடிகளை செயளிக்கச்செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது.கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் முயற்சிகளை பாதுகாப்பாக … Read more