கூட்டுறவு சங்க தேர்தல் – விதிகளை மீறினால் ஓராண்டு சிறை..10 ஆயிரம் அபராதம்!

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் புதிய தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு. கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டிய அவசியத்தை முன்னிட்டு, ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அவ்விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிப்புகளுக்கு இவ்விதிகள் பொருந்துவதாகும். … Read more

#Breaking:ஹெல்மெட் அணியவில்லை:ஒரே நாளில் இத்தனை பேர் மீது வழக்கு பதிவு;அபராதம் – போக்குவரத்து காவல்துறை!

இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.மேலும்,இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் … Read more

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம்..!-தலிபான்கள்

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி … Read more

அடிபணிந்த பேஸ் புக்..! “மத்திய அரசின் விதிகளை ஏற்கத் தயார்” என அறிவிப்பு…!

மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் … Read more

பிரான்ஸை மீண்டும் குறிவைக்கும் கொரோனா! நூதன போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சில நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும், மீண்டும் இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதானால், அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது ஒரு லட்சம் பேருக்கு 250 பேருக்கு … Read more

மாஸ்க் இல்லனா ஒன்னும் வாங்க முடியாது! சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்!

சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள். தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து, சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், சென்னை மாநகராட்சி சில விதிகளைப் பட்டியலிட்டுள்ளது. ரேஷன் கடை 200 கார்டுகளை மேல் உள்ள கடைகளை பிரிக்க வேண்டும். கடைகளில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை செய்ய வேண்டும். டோக்கனில் … Read more

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?உயர்நீதிமன்றம் கேள்வி

ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ,கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று  கேள்வி எழுப்பியது . இதற்கு  தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.அதில், வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என்று விளக்கம் அளித்தது. மேலும் பைக் ரேஸில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்துள்ளது … Read more

H1B விசாவில் திறமைக்கே முன்னுரிமை….விதிகளை தளர்த்தியது அமெரிக்கா…!!

அமெரிக்காவில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள க்ரீன் கார்டு தொடர்பான புதிய சட்ட மசோதாவின்படி H1B விசாவில் அமெரிக்காவில் பணியில் சேர்ந்த இந்தியா சீனா உள்ளிட்ட நாட்டவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் அதிக திறமை உள்ளவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் சட்ட மசோதாவை கடந்த புதனன்று செனட் சபையில் குடியரசு மாற்றும் ஜனநாயக கட்சி சார்பில் அறிமுகப்படுத்தபட்டு  இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இதனால் ஒரு நாட்டில் இருந்து குறிப்பிட்ட அளவிலான நபர்கள் மட்டுமே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை ( கிரீன் கார்டு … Read more