ஜி.எஸ்.டி இழப்பீடு… ₹.1.10 இலட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு…

மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை வழங்க, மத்திய அரசு 1.10 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  அப்போது இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வருவாய் வெகுவாகக் குறைந்தது. … Read more