வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை முயற்சி….!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் உள்ள லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் அந்த வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து மணிமங்கலம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது … Read more

ஏ.டி.எம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த நஜீம் உசேனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த நஜிம் உசேனை ஜூலை 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பல எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை குறிவைத்து கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் நூதன முறையில் கொள்ளையடித்து வந்த 2 நபர்கள் ஏற்கனவே அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கொள்ளை கும்பல் இதுவரை தமிழகம் முழுவதுமுள்ள 30 வங்கிகளில் 1 கோடிக்கும் மேல் கொள்ளையடித்துள்ளதும் கண்டறியப்பட்டது. … Read more

மாமியார் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் ஓடிய புது மருமகள்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரே மாதத்தில் 70 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் உடன் வீட்டை விட்டு ஓடிய புதுப்பெண். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் திருமணமாகி ஒரு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் ஒரு பெண் மாமியார் வீட்டில் இருந்து 70 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளுடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக அவரது கணவர் பிங்கு என்பவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஷாம்லி மாவட்ட காவல் நிலையத்தில் அவரது கணவர் அளித்த … Read more

சென்னையில் கொள்ளையார்களை பிடித்து கொடுத்தவர்கள் மீது தடியடி ..!

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகில் உள்ள மடப்பாக்கம் வள்ளலார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு இளைஞர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் அந்த இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் குவிந்து இருந்த பொதுமக்களை கலந்து செல்லுமாறு காவல்துறையினர் … Read more

பல்வேறு இடங்களில் கை வரிசை காட்டிய கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாண்டிபஜார் ஆகிய இடங்களில் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாண்டிபஜார் ஆகிய இடங்களில் வழிப்பறி அதிகரித்து வந்தது. இதுதொடர்பான விசாரணையின் போது, பாண்டி பஜார் மற்றும் எம்.ஜி.ஆர். நகரில் கொள்ளை அடித்த போது சிக்கிய வீடியோ காட்சிகளில் கொள்ளையன் ஒருவனின் கையில் டாட்டூ இருந்தது. இதை … Read more