இறுதிக்கட்ட பணிகளில் புதியக்கல்விக் கொள்கை!… முழு வீச்சில் மத்திய அரசு…

புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்துவதற்காக இறுதிகட்ட பணிகளில் மத்திய அமைச்சரவை  தீவிரமாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதியக்கல்விக்கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள்,பெற்றோர்கள் போன்றவர்களை கருத்துக்களை தெரிவிக்க கேட்டிருந்த அமைச்சரவை தற்போது அந்த கருத்துக்களை பெற்று பல்கலை கழகங்கள் விரைந்து அனுப்ப கடிதம் அனுப்பியது. மேலும் புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி நிறுவனங்கள்  நிர்வாக சீரமைப்புப் பணிகளை தொடங்க இந்திய பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்த்தக்கது.