திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமி திவ்யானந்த மகராஜ் காலமானார்.!

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவராக இருந்த சுவாமி திவ்யானந்த மகராஜ், நேற்று இரவு காலமானார். திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவராக இருந்தவர் சுவாமி திவ்யானந்த மகராஜ். 86 வயதான இவர், நேற்று இரவு காலமானார். இன்று மாலை 3 மணி அளவில் அவருக்கான இறுதி சடங்குகள் திருப்பராய்த்துறையில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது. இவரது மறைவிற்கு அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் உள்ளிட்ட பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.