நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை வழக்கு – அடுத்த வாரம் ஒத்திவைப்பு

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யகோரிய வழக்கை நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யகோரிய வழக்கை நவம்பர் 11-ஆம் தேதி ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படும் என அரசு தரப்பில் … Read more

பேரறிவாளன் விடுதலை – வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. 161-வது … Read more

#BREAKING: பேரறிவாளன் வழக்கு – அதிகாரம் யாருக்கு? மத்திய அரசுக்கு அடுக்கடுக்காக கேள்வி!

தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 2- 3 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுவிக்கக்கோரிய வழக்கு தொடர்பான விசாரணையின்போது, மத்திய அரசின் கூற்றுபடி கிரிமினல் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என கூறுகிறீர்களா? என்றும் ஆளுநர் 2- 3 ஆண்டுகளாக முடிவும் … Read more