“ஆட்சியை கலைத்தால் தூக்கி போட்டு மிதிப்போம்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம் !

கர்நாடாவை போல தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைத்தால் பந்து மாதிரி தூக்கி போட்டு மிதிப்போம் என்று தமிழக பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி … Read more

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு ! நீதிமன்றம் கேள்வி!

தமிழக பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் தற்போதைய நிலை என்ன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணை அறிக்கையை வரும் 25 ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவு. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் 2012-13 ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உய்ரநீதிமன்ற … Read more

டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகி விடுவார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு!

டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட இன்னும் ஒரு வாரத்தில் அவரை விட்டு விலகி விடுவார் என்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் பின்னல் சிங்கம்,புலி ஆகியவை துரத்தும் நிலையில் அதை உணராமல் பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். சிவகாசியில் பள்ளி மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரன் தற்போது தனிமையில் இருப்பதால் பயந்து போய் உள்ளார். அதிமுக என்ற பெரிய கட்சியை அவர் குடும்ப … Read more

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிகாரிகளே காரணம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசு அதிகாரிகளே காரணம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பல இடங்களில் பொதுமக்கள் மோட்டார் பயன்படுத்தி திருட்டுத்தனமாக குடிநீரை எடுக்கிறார்கள்.இதனை நகராட்சி அதிகாரிகளோ ஊராட்சி செயலாளர்களோ யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் இதனாலே இவ்வாறான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தண்ணீர் பஞ்சம் என்பது செயற்கையாக தான் தென் மேற்கு பருவமழை பெய்யும் சூழலில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்று கூறியுள்ளார்.  உள்ளாட்சி … Read more

தாலி காட்டாமல் பொண்டாட்டி என கூறுவது தவறு…. முதலில் தாலி காட்டட்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தினகரன் தாலியே கட்டாமல் பொண்டாட்டி என கூறுவது தவறு, முதலில் தாலி கட்டட்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதனையடுத்து, விருதுநகர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் … Read more

தினகரன் அணியில் நொந்து போய் உள்ளனர் உடன்பிறப்புகள்..!பால்வளம் பரிதாப பேச்சு..!!

தினகரன் அணியில் உள்ள அனைவரும் நொந்து போயிருப்பதாக தெரிவித்துள்ளார். கோவை பீளமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தினகரன் அணியில் உள்ள அனைவருமே நொந்து போயி உள்ளனர் அவர்கள் எல்லாம் அதிமுகவுக்குத் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த அவர்.தினகரன் அணியில் உள்ளவர்கள் அனைவருமே அதிமுகவுக்குத் திரும்புவார்கள் என்றுத்  நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரு கட்சிகளையும் அதிர்ச்சியடைய செய்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனுக்கு பெரும் இழப்பாக கருதப்பட்ட நிலையில் இது குறித்து … Read more

தமிழகத்தில் ஆணவம் பிடித்தவர்கள்….ஆணவக் கொலைகளை அரங்கேற்றுகிறார்கள்..!!பால்வளம் அதிரடி..!!

தமிழகத்தில் ஆணவம் பிடித்தவர்களால் ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக பால்வளத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவரிடம் திராவிடக் கட்சிகளால் தான், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக கூறிய பாஜகவின் எச்.ராஜா விமர்சனம்  செய்தது தொடர்பாக கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர்,  திராவிடக் கட்சிகள் ஆட்சியில் மட்டும் தான் தமிழகம் மறுமலர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஆணவம் பிடித்தவர்களால் தான் இந்த ஆணவக் … Read more

போராளிக்கு இப்ப டைம் சரியில்ல..!போற இடமெல்லாம் பிரச்சனை..!!முத்து போட்ட பால்வளம்..!!

மதிமுக பொது செயலாளர் வைகோ ஒரு போராளியாக இருந்தாலும் அவருக்கு தற்போது நேரம் சரி இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த வன்னியம்பட்டியில் இன்று அம்மா பூங்காவை திறந்து வைத்தார்.அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு உடற்பயிற்சியும் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜேந்திர பாலாஜி மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு முதலில் அவர் சென்ற இடமெல்லாம் சிறப்பாக  இருந்ததது.ஆனால் தற்போது அவர் சென்ற … Read more

ஜெ. மரணத்துக்கு முன்பே புதிய அரசு அமைக்க ஏற்பாடு-ராஜேந்திர பாலாஜி…!

ஜெயலலிதா இறப்பதற்கு ஒருநாள் முன்னதாகவே புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வரும்படி 4-ம் தேதி நள்ளிரவே அதிமுக தலைமை கழகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும், அன்றையே தினமே புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டதாகவும், தெரிவித்துள்ளார். இதனால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது