பஞ்சாபில் மிக்-21 ரக போர் விமானம் விழுந்து விபத்து – விமானி உயிரிழப்பு!

பஞ்சாபில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் – 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், அந்த விமானத்தின் விமானி அபினவ் என்பவர்  உயிரிழந்துள்ளார். விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வழக்கமான அன்றாட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது விழுந்து விபத்து ஏற்படுவது சில சமயங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மேகா அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளது. இந்த விமானம் ராஜஸ்தானில் உள்ள கங்கா நகர் … Read more

தள்ளு வண்டியில் இருந்து முட்டை திருடிய தலைமை காவலர் சஸ்பெண்ட் – வைரல் வீடியோ உள்ளே!

சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த முட்டை திருடிய பஞ்சாபை சேர்ந்த தலைமை காவலர் தற்பொழுது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மக்களின் உயிர்காக்கும் காவல் துறை அதிகாரிகள் பல இடங்களில் பாராட்டுக்குரியவர்களாக இருந்தாலும் சில இடங்களில் மக்களுக்குப் பிடிக்காத சில விஷயங்களிலும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்றாக கடை வைத்திருப்பவர்களிடம் தகராறு செய்து பொருட்களை இலவசமாக பெற நினைப்பது உள்ளிட்ட சில தவறான செயல்களில் சில காவலர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் பஞ்சாபிலுள்ள சண்டிகர் ஃபதேகர் சாஹிப் அருகே … Read more

15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 26 வயது இளைஞர் கைது!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் ஒன்பதாம் வகுப்பு படிக்க கூடிய 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளுகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டது. பெண் குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை தான் தற்பொழுது பல நாடுகளில் உருவாகியுள்ளது. இவ்வாறு குழந்தைகளிடம் கூட கொடூரமாக நடந்து கொள்ளும் மிருகங்களுக்கு தக்க தண்டனையையும் காவலர்கள் கொடுத்து வருகின்றனர். தற்பொழுதும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் காரார் எனும் … Read more

119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி உயிரிழந்தார்!

பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் அவர்கள் இன்று உயிரிழந்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் எல்லாம் 80 வயதை தாண்டி வாழ்ந்தாலே ஆச்சரியமாக பார்க்கக்கடிய அளவிற்கு மனிதர்களின் வாழ்நாள் காலம் மிக குறைந்து விட்டது. இந்த நேரத்தில் 100 வயதிற்கு மேல் தாண்டி வாழ்பவர்கள் மிக ஆச்சரியத்துடன் பார்த்து கூடியவர்களாக தான் இருக்கின்றனர். அவ்வாறு 119 வயதை கடந்து வாழ்ந்தவர் தான் பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பச்சன் கவுர். … Read more

ஆட்டோவில் இருந்த பெண்ணிடமிருந்து போனை பறித்த திருடர்கள் – கீழே விழுந்து உயிரிழந்த பெண்!

பஞ்சாபில் ஆட்டோக்குள் அமர்ந்திருந்த பெண்ணிடமிருந்து போனை திருடர்கள் பறிக்க முயன்ற போது அதை மீண்டும் பிடுங்க நினைத்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். தற்போதைய காலத்தில் தெருவில் பெண்கள் அல்ல ஆண்களே நடந்து செல்வதற்கு சற்று அச்சமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் வழிப்பறி கொள்ளை தான். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருக்க கூடிய பொருட்கள், கைப்பை அல்லது அணிந்திருக்கக் கூடிய தங்க நகைகள் ஆகியவற்றை திருடிவிட்டு செல்லும் கொள்ளையர்கள் பல்வேறு … Read more

#Breaking: 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி “ஆல் பாஸ்”- பஞ்சாப் முதல்வர் அதிரடி!

பஞ்சாப் மாநிலத்தில் 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என்று அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேசமயத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், … Read more

பஞ்சாப்பில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..!

கடந்த ஆண்டு முழுவதும் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா பாதிப்புகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுகளால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குஜராத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால்  கொரோனா தொற்றை கட்டுப்படுத்த குஜராத் அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன்படி, நேற்று முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை இரவு … Read more

வட இந்தியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!

வட இந்தியாவின் பஞ்சாப், டெல்லி மற்றும் அண்டை நாடாகிய ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இன்று இரவு 10.31 மணியளவில் டெல்லி, பஞ்சாப் மற்றும் இந்தியாவின் அண்டை நாடாகிய ஆப்கனிஸ்தானின் தஜிகிஸ்தான் ஆகிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகிய நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாம். பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், டெல்லி, நொய்டா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்து … Read more

பஞ்சாப் முதல்வரின் வேண்டுகோளையும் மீறி 1338 செல்போன் டவர்கள் விவசாயிகளால் சேதம்!

பஞ்சாப் முதல்வரின் வேண்டுகோளையும் மீறி 1338 செல்போன் டவர்கள் டெல்லியில் இதுவரை விவசாயிகளால் சேதபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசால் பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் அழைக்கப்பட்டு பேசினாலும், முழுவதுமாக மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதையே விவசாயிகள் கோரிக்கையாக … Read more

இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.!

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 2 தீவிரவாதிகள் எல்லைப்பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் அத்தாரி எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதற்கு தேடுதல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊடுருவ முயன்ற … Read more