தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் : கோவையில் அண்ணாமலை… சென்னையில் தமிழிசை…

Annmalai - Tamilisai soundarajan

Election2024 : மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழகத்தின் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேலும் கூடுதலாக நான்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. இதில், முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் … Read more

கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளையா.? பொன் ராதாகிருஷ்னன் உடன் விவாதிக்க தயார்.! தமிழக அமைச்சர் சவால்.!

கன்னியாகுமரியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயார் என தமிழக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பதில் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பெயர் சரித்திரத்தில் நிலைத்து இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தமிழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் கடமையை … Read more

கன்னியாகுமரியில் பாஜகவினர் மறியல் போராட்டம்…!

பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில்  பாஜகவினர் போராட்டம். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பாஜக நிர்வாகியை திருநெல்வேலி திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவர் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பாஜக நிர்வாகி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் பாஜக நிர்வாகியை சந்தித்து நலம் விசாரித்தார். பாஜக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து திமுக எம்பி ஞானதிரவியத்தின் மீது கொலை வழக்கு … Read more

நள்ளிரவில் நடந்த சம்பவம்..முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது…

திருநெல்வேலி மாவட்ட திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவர், திருநெல்வேலி திமுக எம்பி ஞானதிரவியம் மற்றும் அவர் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பாஸ்கர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கரை நேற்று நள்ளிரவு … Read more

Breaking:பாஜகவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு,ஹெச்.ராஜா ஆகியோருக்கு புதிய பொறுப்பு…!

பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,குஷ்பு ஹெச்.ராஜா ஆகியோருக்கு அக்கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜேபி நட்டா இன்று பாஜக கட்சியின் தேசிய அளவிலான உறுப்பினர்கள் நியமனம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல,தேசிய செயற்குவுக்கான சிறப்பு அழைப்பாளராக குஷ்பு,ஹெச்.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்,உத்தரப்பிரதேச எம்எல்ஏ ராஜேஷ் அகர்வால் தேசிய பொருளாளராகவும்,புதுச்சேரி உள்துறை … Read more

“பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை” – பொன்.ராதாகிருஷ்ணன்..!

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துக்களை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாகர்கோவில் மாநகர் வடக்கு மண்டல் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துக்களை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும். வ.உ.சி சிலை, மணிமண்டபம், தூத்துக்குடி மாவட்டத்தில் … Read more

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி – முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து..!

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அவர்களுக்கு,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து,ஆர்.என்.ரவி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அவர்களுக்கு,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “தமிழக ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும், முன்னாள் தேசிய பாதுகாப்பு … Read more

ஓபிஎஸ் மனைவி மறைவு;”பிரிவைத் தாங்கும் மனவலிமை ” -முன்னாள் அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன் இரங்கல்..!

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். இதனையடுத்து,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை செலுத்தி,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும்,அதிமுக கட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரில் சென்று … Read more

“மனதில் பட்டதை தைரியமாகச் சொல்லும் துணிவு கொண்டவர்” – முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன்..!

முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களின் மறைவிற்கு முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 87.இதனையடுத்து,அவரது உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சியினர் இரங்கல் தெரிவித்து … Read more

#BREAKING: பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா..!

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாளுக்கு நாள் கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த கொரோனாவால்  பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருகின்ற நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.