போலீஸ் தாக்கி மதுரை கறிக்கடை முதியவர் மரணம் – பொதுமக்கள் போராட்டம்!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருவதால், அரசும் அதற்கான நடவடிக்கையாக கடுமையான சில சட்டங்களையும் போட்டுள்ளது. அதில் ஒன்றாக தேவையின்றி தடையை மீறுபவர்களை போலீசார் தீவிரமான லத்தி அடியையும் கையாண்டு வருகின்றனர்.  இந்நிலையில், மதுரை கருப்பாவூரணியில் போலீஸ் தாக்கியதில் ராவுத்தர் என்னும் கறிக்கடை வைத்துள்ள முதியவர் உயிரிழந்துள்ளதாக அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 71 வயதுடைய இந்த முதியவரை போலீசார் தாக்கியதால் உடல்நலம் குன்றி உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.