முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ‘மோடி மோடி’ முழக்கம்.! அமைதிப்படுத்திய பிரதமர் மோடி.!
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று இரு அரசு நிகழ்வுகளில் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். காலையில், திருச்சி – புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38வது பட்டமளிப்பு விழாவில் இருவரும் கலந்துகொண்டனர். உடன் ஆளுநர் ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதற்கடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய முனையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, … Read more