கோவை அரசு மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கி மற்றும் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையம்.!

கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தையும், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். இந்த தயாரிப்பு நிலையம் மூலம் விபத்தில் கைகளில், கால்கள் உள்ளிட்ட உடற்பாகங்களை இழந்தவர்களுக்கு செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் காப்பீட்டு … Read more

இந்தியாவில் மேலும் ஒரு பிளாஸ்மா வங்கி.. திறந்து வைத்த முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் மேலும் ஒரு பிளாஸ்மா சிகிச்சை வங்கியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,740 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 3,411 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிளாஸ்மா … Read more

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தர். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ராதாகிருஷ்ணன் ” மாநகராட்சி வீட்டு வசதி கட்டடத்தில் 5000 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை அல்லாத பகுதிகளிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது” என்றார். தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு … Read more

இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி தொடக்கம்.! மருத்துவர்கள் புது நம்பிக்கை.!

நாட்டிலேயே முதன் முறையாக பிளாஸ்மா வங்கி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் உள்ள பிளாஸ்மா தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அதனை கொண்டு மற்ற கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சையாகும். பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்ட பின்பு, மீண்டும் ரத்தமானது, குணமடைந்து பிளாஸ்மா தானம் செய்தவர்களின் உடம்பில் செலுத்தப்பட்டுவிடும். இந்த சிகிச்சை முறைக்காக நாட்டிலேயே முதன் முறையாக பிளாஸ்மா வங்கி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த … Read more

டெல்லி அரசு இரண்டு நாட்களில் ”plasma bank” அமைக்க உள்ளது.!

டெல்லி அரசு இரண்டு நாட்களில் ‘பிளாஸ்மா வங்கி’ அமைக்க உள்ளது. புது டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இரண்டு நாட்களில் ஒரு ‘பிளாஸ்மா வங்கி’ செயல்படுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார். டெல்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் எல்.என்.ஜே.பி மருத்துவமனை இந்த சிகிச்சையை 35 பேருக்கு வழங்கியது, அவர்களில் 34 பேர் குணடைந்துள்ளார்கள் மற்றொரு தனியார் மருத்துவமனை 49 நோயாளிகளுக்கு வழங்கியதில் 46 பேர் குணடைந்தனர் என தெரிவிக்கப்படவுள்ளது .