செல்போன் விலை அதிரடியாக உயர வாய்ப்பு!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிக்கையில்  இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான சுங்க வரி 15விழுக்காட்டில் இருந்து 20விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான சுங்க வரி இப்போது 15விழுக்காடாக உள்ளது. வரும் நிதியாண்டில் இந்த வரியை 20விழுக்காடாக உயர்த்துவதாக பட்ஜெட்டில்  அறிவித்துள்ளார். இதனால் இறக்குமதி செல்போன்களின் விலை குறைந்தது 5விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.