#PBKSvRR: சுழலில் கலக்கிய சாஹல்! ராஜஸ்தானுக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு.!

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் கிங்ஸ். ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் தவான் 12 ரன்களில் விக்கெட்டை … Read more

#PBKSvRR: டாஸ் வென்று பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. பிளேயிங் லெவன் இதோ!

ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 52-வது லீக் போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 51 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணிகளும் 10 போட்டிகள் கடந்து விளையாடி வருகிறது. … Read more

நேற்று வெற்றி பெற்ற போதிலும் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!

சஞ்சு சாம்சனுக்கு பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் விதிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இருந்தபோதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.கேவின் எம்.எஸ் … Read more

#PBKSvRR: கடைசி ஓவரில் மிரட்டிய கார்த்திக் தியாகி., ராஜஸ்தான் திரில் வெற்றி ..!

பஞ்சாப் அணி 20 ஓவரில் 183 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்று ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்களை எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் … Read more

#PBKSvRR: பஞ்சாப் பவுலரை பதம்பார்த்த ராஜஸ்தான்…வெற்றி பெற 186 ரன்கள் இலக்கு!

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் 185 ரன்களை குவித்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஜோடி சிறப்பான தொடக்கத்தை … Read more