#Breaking:சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் கட்டணம் இலவசம் -தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு..!

சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் வாகனங்களை கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் அதிகபட்ச நேரங்களில் கூட ஒரு வாகனத்திற்கு 10 வினாடிகளுக்கு மிகாமல் சேவை நேரத்தை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்(NHAI)வெளியிட்டது.அதன்படி,கடந்த பிப்ரவரியிலிருந்து இருந்து FASTAG முறை அறிமுகப்படுத்தப்பட்டு 100% பணமில்லா டோலிங்காக மாறியுள்ளது. இந்நிலையில்,சுங்கசாவடிகளின் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறும்,இந்த … Read more

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,பொது மக்களின் நலன் கருதி கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும் என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி,கொரோனா தொற்றினால் … Read more

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு,ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில் முக்கியமான ஒன்றான ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப் படுகிறது என்றும்,இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது.அதன்படி,பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28 இல் … Read more

கொரோனா தொற்றினால் மக்கள் இறந்துக் கொண்டிருக்கும் போது, பசுக்களை பாதுகாக்க பசு உதவி மையம் அமைக்கும் உத்திரப்பிரதேச அரசு..!

கொரோனா தொற்றிலிருந்து பசுக்களை பாதுகாக்க உத்திரப்பிரதேச அரசு,ஒவ்வொரு மாட்டத்திலும் பசு உதவி மையம் அமைக்க  உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பானது மிகவும் தீவிரமடைந்துள்ளது.இதனால்,நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பெற முடியாமல் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிகின்றனர். இதனைத்தொடர்ந்து,உத்திரப் பிரதேசத்திலும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர்.இதனையடுத்து,இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக 5-6 மணி நேரம் … Read more

புதிய சாலை அமைக்க கோரிய மனு – மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பழைய சாலையை தோண்டிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என கோரிய வலகழகை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  பழைய சாலையை தோண்டி விட்டு, அந்த இடத்தில் முறையாக புதிய சாலை அமைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த மனுவில் பழைய சாலைகளை தோண்டாமல் புதியதாக சாலைகளை போடுவதால், கோவில்கள், சிலைகள், நினைவு சின்னங்கள் ஆகியவை தாழ்வான பகுதிகளுக்கு சென்று விடுவதால் பழைய சாலைகள் தோண்டப்பட்ட … Read more

2020 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் முதலிடம் பிடித்த பிரியாணி ஆர்டர்!

இந்த வருடம் இந்தியர்களுக்கு மிகப் பிடித்தமான உணவாகவும் வினாடிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு ஆர்டர் செய்யப்பட்ட உணவாகவும் சிக்கன் பிரியாணி உள்ளது என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபலமான ஆன்லைன் உணவு பரிமாறும் செயலி தான் ஸ்விக்கி. இந்த ஸ்விக்கி செயலி மூலமாக பல மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை விருப்பமான நேரங்களில் ஆர்டர் செய்து வாங்கி உண்டு வருகின்றனர். ஆர்டர் செய்த சில மணி நேரங்களிலேயே வீட்டினை வந்தடையும் இந்த ஸ்விக்கி உணவுக்கு பலரும் அடிமைகளாக உள்ளனர் … Read more

அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம்!

அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜாகவினர் சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி சில இடங்களில் வேல் யாத்திரை நடத்தக்கூடிய பாஜகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மத நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. … Read more

அக்.,14ல் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்…பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.,14ம் தேதி முதல் வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 அரியர்), இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்  இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்ளிடவைகள்) அக்.,14ம் தேதி  வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும் பள்ளி … Read more

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், மதுவை ஆன்லைனில் விற்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது என்று தமிழக அரசு பதில் தெரிவித்தது.  … Read more

மதுபானங்களை அழிப்பது பற்றி முடிவெடுக்கலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கள்ளச்சந்தையில் பறிமுதல் செய்த மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்களே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் மளிகைகடைகள்,காய்கறிக்கடைகள் உள்ளிட்டவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதனால் வணிக வளாகங்கள்,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. எனவே போலீசார் இதனை தடுக்க தமிழகம் … Read more