50% ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் ஆக.25ல் தீர்ப்பு!

மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக.2ம் தேதி தீர்ப்பு. மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக.2ம் தேதி தீர்ப்பு வழங்கபடுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. திமுக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக.2ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவுக்கு … Read more

OBCக்கு இடஒதுக்கீடு: அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல்.!

நடப்பாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் OBC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல் என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியீடு. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 30% இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி, தமிழகத்தில் சமூக நீதிக்கான முதல் வெற்றியை நிலை நாட்டினார்கள். … Read more

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது – விஜயகாந்த்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது  என்று  விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் … Read more

அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் -மு.க. ஸ்டாலின்

பா.ஜ.க. அரசுக்கு எதிராக, நாடு முழுவதும் சமூகநீதியில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பான வழக்கில் ,ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 … Read more

50 % இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது – மத்திய அரசு

ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் … Read more

“இட ஒதுக்கீடு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

“நீட் தேர்வு, தேசிய கல்விக்கொள்கை ஆகியவற்றில் இரட்டை வேடம் போட்ட எடப்பாடி பழனிசாமி அரசு – பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்திலும் அதேபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழ்நாட்டிலிருந்து அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியிடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட வேண்டும்” என்றும் – “அதை வழங்கும் … Read more

#BREAKING : 50 % இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த … Read more

ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்.. பாஜக நிலைப்பாடு குறித்து வி.பி.துரைசாமி விளக்கம்!

ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக்கருத்து கிடையாது என பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை கமலாயத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார். அந்த உரையில் அவர், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக்கருத்து கிடையாது எனவும், நீண்ட காலமாக ஜாதியை, மொழியை சொல்லி திமுக அரசியல் நடத்திவிட்டதாகவும், ஜாதி பிரச்னையை தூண்டும் வகையில் … Read more

#BREAKING : ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில்  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. … Read more

ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக வரவேற்பு!

மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக பாஜக வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க … Read more