BREAKING:அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ வசூல் இல்லை…!

 சமீபத்தில் ரிசர்வ் வங்கி மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்கான வங்கி கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்தத் தேவையில்லை எனவும் அறிவித்தது. இந்நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ , வட்டி  வசூலிக்கப்படாது என தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும்  தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.