வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா…! ஆய்வில் வெளியான தகவல்…!
வௌவால்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் 24 வகையான கொரோன வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் பெருந்தொற்றுக்கு காரணமான SARS-COV-2வகையை ஓத்திருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் யுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. முதலில் அங்கு கண்டறியப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் பாதிப்பு பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் வௌவால் இனத்தில் புதுவகையான வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். … Read more