போராட்டம் முடிவுக்கு வருமா? இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு. சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி சென்னை நுங்கப்பாக்கத்தில் 4ஆவது நாளாக அரசு பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று அமைச்சருடன் நடக்க உள்ளது.

லடாக்கில் பதற்றம்: ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை.!

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனாவின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளை ஆராய இருநாட்டு ராணுவ கமாண்டர் 6ம் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இது சுஷில்-மோல்டோ சந்திப்பு பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கேற்றுள்ள நிலையில், முதல்முறையாக மத்திய அரசு தரப்பில் வெளியுறவுத்துறை இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா பங்கேற்று உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் … Read more