வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது – அன்புமணி ராமதாஸ்

பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட். தர்மபுரி மாவட்டம் மொராப்பூரில் இஸ்லாமியக் கைதிகள் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பேச்சாளரான கன்னியாகுமரியைச் சேர்ந்த ஹிம்லர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென திமுகவினர் சிலர் மேடையில் ஏறி வன்முறையில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து, தமிழக முதல்வரையும், திமுகவினரையும் மோசமாகப் … Read more

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் தவறானது – தொல்.திருமாவளவன்

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து. தருமபுரி அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி … Read more

சின்ன பசங்கனு தகராறு பண்ணிட்டு போய்ட்டாங்க.. நானா இருந்தா? – சீமான் ஆவேசம்!

என்னை தொட முடியவில்லை என்பதால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கின்றனர் என்று சீமான் விமர்சனம். சென்னை கொளத்தூர் பகுதியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொளத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குறிப்பிட்ட இடம் எடுப்பதாக அதிகாரிகள் கூறிவிட்டு, மக்களை முன் அறிவிப்பு இல்லாமல் வெளியேற்றி இருக்கின்றனர். இப்பகுதியில் 50க்கும் மேற்ப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அரசு மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற திட்டமிட்டிருந்தால் இழப்பீடு, மாற்று இடம் குறித்து ஏன் இதுவரை பேசவில்லை? … Read more

நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம் – சீமான்

நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்று சீமான் பேச்சு. தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக முதலமைச்சர் முகா ஸ்டாலின் அறிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். இதற்கு பலரும் தமிழக அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்றும் வேறு பாடல் இருக்கும் எனவும் … Read more

7 பேரை விடுவிக்க திமுக ஆர்வம் காட்டவில்லை – சீமான் குற்றச்சாட்டு!

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது காட்டிய ஆர்வத்தை தற்போது திமுக அரசு காட்டவில்லை என குற்றசாட்டினார். 20 ஆண்டுகளுக்கு … Read more

சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசும் சீமானை குண்டாசில் கைது செய்ய வேண்டும் என கே.எஸ் அழகிரி ட்வீட். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசி வருகிறார் என்று குற்றசாட்டியுள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் … Read more

அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் – சீமான்

நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரல்ல, அது நமது இனத்தின் அடையாளம் என்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை. உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி மக்களுக்கானது எனவும் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வேட்பாளராக … Read more

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்;நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும்,உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.வரும் 22 ஆம் தேதியோடு வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ள … Read more

சமூக நீதிக்காக திமுக என்ன செய்திருக்கிறது? – சீமான் கேள்வி

திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. சமூக நீதி என்றால் என்ன? மக்களுக்கு திமுக செய்த சமூக நீதி என்ன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினர் என்பதை நான் எதிர்க்கிறேன் என்றும் தெரிவித்தார். திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை … Read more

உயிர் காக்க உதவுங்கள்! – தமிழக அரசுக்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கோரிக்கை!

மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பச்சிளங்குழந்தையின் உயிரைக் காக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் கோரிக்கை. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்தியில், தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் பகுதியினைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி இணையரின் மகளான 21 மாதமேயான பாரதி எனும் பச்சிளங்குழந்தைக்கு முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) வகை 2 எனும் அரியவகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) … Read more