கொரோனா வைரஸ் ஆராய்ச்சிய்ன் முடிவில் இருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக்கொலை…

உலகம் முழுவதையும் தனது கோர பிடியில் சிக்க வைத்து வரும் கொடிய கொரோனா வைரஸ் பிடியிலிருந்து தப்ப உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை  மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் தற்போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுட்டு கொல்லப்பட்ட ஆராய்ச்சியாளர் பெயர் டாக்டர் பிங் லியு என்பதாகும். இவர்,  கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் தலை மற்றும் கழுத்துப் … Read more

கமுதி அருகே பரபரப்பு ! ஆடு மேய்ந்ததால் அரிவாள் வெட்டு – 20 பேர் படுகாயம், ஒருவர் பலி

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதும் பாடாய் படுத்தி வரும் நிலையில் ஒரு ஆடு விளைச்சல் நிலத்தில் மேய்ந்ததால் 20 பேர் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்தும், ஒருவர் உயிரிழந்த வருந்ததக்க சம்பவம் குறித்த  செய்தி தான் இந்த செய்தி தொகுப்பு. தமிழகத்தின்  ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு  அருகே உள்ள ஆசூர்  கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது  மகன் முனியசாமி. இவர் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவ நாளன்று வழக்கமாக ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்காட்டுப் … Read more

யார் அதிகம் நிதியுதவி கொடுத்தது?! உயிரிழப்பில் முடிந்த ரசிகர்கள் மோதல்.!

விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா நிவாரணத்திற்கு யார் அதிகம் பணம் கொடுத்தது? விஜயா? ரஜினியா? என்பது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். கொரோனா நிவாரண நிதியுதவியாக பலரும் தங்களால் இயன்ற நியுதவிகளை அளித்து வருகின்றனர். இதில், திரைப்பட நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வந்தனர். விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் 22 வயதான யுவராஜ் விஜய் ரசிகர் ஆவார். … Read more

கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறு! 5 குழந்தைகளை ஆற்றில் வீசி தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மனைவி!

கணவன் – மனைவி தகராறில் 5 குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய். தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி.  உத்திரபிரதேசம் மாநிலம், பாதோகி மாவட்டம்,  ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர், மிருதுல் யாதவ். இவருடைய மனைவி முஞ்சி யாதவ்.  இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, சங்கர், மாதேஸ்வரி மற்றும் கேசவ் என மூன்று பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு இருந்து வந்த  நிலையில், நேற்று முன்தினம் இரவும் … Read more

அதிர்ச்சி: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை.!

சென்னை மதுரவாயலில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்.  சென்னை மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று இரவு சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்ற இளைஞர் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கத்தியதை பார்த்து பயந்துபோன அந்த கொடூரன் … Read more

கொடூரம்: முண்டமாக கிடந்த சடலம்.! தலையை தனியாக வெட்டி எடுத்து சென்ற கொலையாளி.!

மதுரை மாவட்டம் அவனியபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் தலையில்லாமல் பிரேதத்தை கண்ட நாய் குறைத்து கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது அங்கு இருந்த இளைஞர் உடல் தலை இல்லாத நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. அதில் முதற்கட்ட விசாரணையில், சிலர் மது அருந்துவதற்கு இந்த பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்றும், அப்போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என … Read more

அதிமுக பிரமுகர் கொலை..! 16 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு..!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அதிமுக பிரமுகர் மூர்த்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 16 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி. விராலிமலையில்  பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அதிமுக பிரமுகர் மூர்த்திக்கும் , வீராச்சாமிக்கும் இடையே  பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி மூர்த்தி அழைத்ததன் பேரில் வீராச்சாமி, அவரது மகன் முத்து இவர்களது உறவினர்கள் இரண்டு பேர் … Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் வியாபாரி ஒருவரை சரமாரியாக வெட்டி சாய்த்த மர்ம கும்பல்.!

பெங்களூரில் டி.ஜே.ஹள்ளி என்ற பகுதியில் பர்னிச்சர் வியாபாரம் செய்து வரும் அம்ஜத் என்பவர், சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த போது பட்டப்பகலில் திடீரென அவரை சுற்றி வளைத்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.  இதில் சம்பவ இடத்திலேயே அம்ஜத் உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அந்த மர்ம கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் நடுரோட்டில் … Read more

மனைவியை கொன்று தற்கொலைக்கு முயற்சித்த கணவன்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகவே உள்ள சிங்காரப்பேட்டை நார்ச்சம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர், சக்திவேல். 38 வயதாகும் இவர், கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா (32) என்ற மனைவி, மதன் (9) என்ற மகனும், வைஷ்ணவி (6) என்ற மகளும் உள்ளனர். இவர், கேரளாவில் பணியை முடித்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நதியாவிடம் தகராறு செய்வார். அதைப்போலவே, தற்பொழுதும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திகுமார், தனது … Read more

ஆற்றுப்பகுதியில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட சடலம்.! அதிர்ச்சியடைந்த காவல்துறை.! நடந்தது என்ன.?

தேனீ மாவட்டத்தில் ஆற்றுப்பகுதியில் உடலில் உள்ள பாகங்களை துண்டித்து கொலை செய்து சடலம் கிடந்ததை பார்த்த காவல்துறை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விசாரணை மூலம் கொலையாளிகளை பிடித்தனர். தேனீ மாவட்டம் கம்பம் தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்துள்ளது. பின்னர் தகவலறிந்த கம்பம் போலீசார் சம்பா இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா … Read more