வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு – வேளாண் அமைச்சர்

2022-23-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் 2-வது வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் தாக்கல் செய்தார். அப்போது வேளாண் பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு … Read more

#LIVE: வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு.! முழு விவரம் உள்ளே..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் 2022-23- ஆம் ஆண்டுக்கான முழுமையான காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தமிழக … Read more

தமிழகத்துக்கான உரங்களை உரிய நேரத்தில் வழங்குக – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டிற்கு உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்குமாறு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கடிதம். இதுதொடர்பாக மத்திய இராசயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், உரிய நேரத்தில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை உர வழங்கல் திட்டத்தின்படி முழுமையாக வழங்கவும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உரங்களை தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களில் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள துறைமுகத்திலும் வந்தடைய ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை … Read more

#BREAKING : ‘விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம்’ – முதல்வர் அறிவுறுத்தல் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விவசாயிகளுடன் ஒருநாள் திட்டத்தின்கீழ் ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில், மாதம் ஒருநாள் எம்எல்ஏக்கள் ஒரு கிராமத்திற்கு சென்று கருத்து கேட்க முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அந்த வகையில், விவசாயிகளுடன் ஒருநாள் திட்டத்தின்கீழ் ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கு சென்று விவசாயிகளின் கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

எனது பிறந்தநாளன்று யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

எனது பிறந்தநாளன்று யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வரும் 25-ம் தேதி  பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிறந்தநாளன்று யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நண்பர்கள் உள்பட யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று … Read more

54,000 ஏக்கரில் 3.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்..!

குறுவை பருவத்தில் 54 ஆயிரம் ஏக்கரில் நெல் 3.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தமிழக அரசு புதிய வரலாறு படைத்துள்ளது. அந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வைத்த முதல்வருக்கு நன்றி. இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு 3.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. … Read more

நெற்பயிருக்கான காப்பீடு – வேளாண்துறை அமைச்சர் விளக்கம்!

அறுவடை நடந்து வரும் நிலையில், சம்பா பயிர்களுக்கான இன்சூரன்ஸ் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் விளக்கம். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், குறுவை சாகுபடி முடிந்து, சம்பா சாகுபடி நடைபெறுகிறது. 3.35 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 665 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், எப்படி குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு … Read more

தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு. இன்று இரண்டாவது நாள் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், வேளாண் மற்றும் உழவர்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் உரையின்போது, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். கோவை மாவட்டம் வேளாண் பல்கலைக்கழகத்தில், தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும் … Read more

உணவுபதைபடுதலுக்கென்று தனி அமைப்பு – வேளாண் அமைச்சர்

உணவுபதைபடுதலுக்கென்று தனி அமைப்பு தொடங்கப்படும்.  ன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இதில்,உணவு பதப்படுத்துதலுக்கு தனி கவனம் செலுத்தி முன்னேற்றுவதற்காக உணவுபதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு உருவாக்கப்படும் என்றும், மீன் பதப்படுத்துவதற்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர்,, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில்களுக்கு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

#AgriBudget2021: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் எவற்றுக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு!!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2வது இன்று தொடங்கிய நிலையில், வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று … Read more