மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது – சு.வெங்கடேசன் எம்.பி

மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது என சு.வெங்கடேசன் எம்.பி கருத்து.  கோவை அனில்குமாருக்கு உத்தரகாண்ட் – கனாசரில் தேர்வு மையம் போடப்பட்டிருந்ததை மாற்றித்தர கோரிய கடிதத்திற்கு வந்துள்ள பதில் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘இயந்திரம் இயந்திரத்தனமாகத்தான் இருக்கும். ஆகவேதான் மனித தலையீடு வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது.’ என பதிவிட்டுள்ளார்.

“தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு,வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு” – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வெறும் ஆயிரம் ரூபாய்: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று … Read more

“தன்னார்வலர்களே…இவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர கூடுதல் முயற்சி வேண்டும்” – எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!

மதுரை:கொரோனா நெருக்கடி காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் இழப்புகள் குறித்து உரிய சான்றிதழ் பெற முடியாதவர்களுக்கு தன்னார்வலர்களும்,இயக்கத்தோழர்களும் உதவ வேண்டுமென எம்பி சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால நலனுக்கான அரசின் நிவாரணங்களை பெற்றுத் தரும் முயற்சிகள் கூடுதலாக்கப்பட வேண்டும் என்று தன்னார்வலர்களுக்கு மதுரை எம்பி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரிருப்பதவது: கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த குழந்தைகளின் … Read more

“இது மிகவும் கொடூரமானது;மதச்சார்பின்மைக்கு எதிரானது” – மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை:நவராத்திரி விழாவை முன்னிட்டு போடப்பட்ட உத்தரவு;இனி இதுபோன்ற தவறு நடக்காது என எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு யூனியன் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று யூனியன் வங்கி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதற்கும்,மேலும்,அவ்வாறு கடைபிடிக்காதவருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று கூறி,யூனியன் வங்கி தலைவருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் … Read more

“மக்களே கவனமாய் இருங்கள்” – எம்பி சு.வெங்கடேசன் எச்சரிக்கை!

மதுரை:வைகை அணையிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் அதனை ஒட்டியுள்ள கரையோர மக்கள் கவனமாய் இருக்கவும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால்,தமிழகத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில்,வைகை அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.இதனால், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு … Read more

ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை – மத்திய அமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம்!

ஹஜ் யாத்திரை புறப்பாடு மையங்கள் பற்றிய முடிவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும்,அதில் சென்னை சேர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு புறப்பாடு மையங்கள் 21 இல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது. இப்பொழுதும் அதே எண்ணிக்கை என்பது பொறுத்தமல்ல எனவும்,ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்களுக்கு … Read more

“இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தேர்விற்கு இந்தி மொழியில் மட்டும் பயிற்சி வகுப்புகளா ?” – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்..!!

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்விற்கு இந்தியில் மட்டும் நடத்துவது கண்டனத்திற்குரியதாக எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியில் மட்டுமே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியதாவது: “பொதுத்துறை பொது … Read more

“கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்கள்;தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை முறியடிப்பு”- எம்பி சு.வெங்கடேசன் நன்றி..!

உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டதற்காக,இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து இந்திய ரயில்வே உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் … Read more

அதிர்ச்சி..தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பில் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்;ரயில்வே உத்தரவை ரத்து செய்க – எம்பி சு.வெங்கடேசன் கடிதம்..!

சென்னை தேர்வு வாரியத்தின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே காலி இடங்களுக்கு நியமிக்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்த இந்திய ரயில்வேயின் உத்தரவை ரயில்வே அமைச்சர்  ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் கடிதம் … Read more

அஞ்சல் பணி நியமன முறை….”பாதங்களுக்கு செருப்பே தவிர செருப்புக்கு பாதம் அல்ல” – எம்பி சு.வெங்கடேசன்..!

அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜூலை 07, 2021 அன்று,மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள், அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய  அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில்,அவர் எழுதிய கடிதத்திற்கு அஞ்சல் இயக்குனரகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக … Read more