ரூ.9,800-ஐ மென்று சாப்பிட்ட செல்லப்பிராணி! அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

ரூ.9,800-ஐ மென்று சாப்பிட்ட செல்லப்பிராணி. நாம் நமது வீடுகளில் செல்ல பிராணிகளை மிகவும் பாசத்துடன் வளர்ப்பதுண்டு. ஆனால் இந்த செல்லப் பிராணிகளால் சில நேரங்களில் நமக்கு இழப்பீடுகள் கூட ஏற்படுவது உண்டு. அந்த வகையில் ஆஃப் மேன் நாட்டை சேர்ந்தவர் ஜோஸலின். அவர் தனது படுக்கையின் ஓரத்தில் ஒரு சிறிய பானை ஒன்றை வைத்து, அதில் தான் மிச்சப்படுத்திய பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது செல்லப்பிராணியான பெக்கி,  அந்த பானையிலிருந்து  100 டாலர் (ரூ.9,800) பணத்தையும் … Read more

வீட்டில் செல்வம் பெருகணுமா.? அப்போ சமையலறையில் இந்த மாற்றத்தை கொண்டு வாங்கப்பா.!

நம்முடைய வீட்டின் சமையலறை சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால் செல்வம் பெருகும் என்பதை பார்க்கலாம். நமது வீட்டின் சமையல் அறையை நன்றாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேறுமாம். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் உள்ளது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும். பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை தான். அதிலும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் … Read more

ஏடிஎம்மில் ரூ.5,000 பணம்.! காவல்நிலையத்தில் ஒப்படைத்த அதிகாரி.!

வேலூரில் உள்ள ஒரு ஏடிஎம்மில் கிடைத்த ரூ.5,000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆற்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் சோமு என்பவர் அங்குள்ள ஏடிஎம் சென்று பணம் எடுக்கும்போது இயந்திரத்தில் ரூ.5,000 பணம் இருந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த அதிகாரி பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் அதிகாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சாப்பிட்டதுக்கு காசு கேட்டதால் கடை ஊழியரை சரமாரி அடித்த இளைஞர்கள்.!

மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் சில இளைஞர்கள் பப்ஸ் சாப்புட்டுள்ளனர். அதற்கு காசு கேட்ட கடை ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் கிறிஸ்டி மோசே என்பவர் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார். அந்த பேக்கரிக்கு வந்த சில இளைஞர்கள் பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் காசு கேட்டதால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் பேக்கரி ஊழியரை சரமாரியாக அடித்துள்ளனர். அதுவும் பொதுமக்கள் முன்னிலையில், பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. … Read more

முந்துங்கள் மக்களே.! இன்று தான் கடைசி நாள் பொங்கல் பரிசு பெறாதவர்களுக்கு SMS அனுப்பப்படும்.!

தமிழகத்தில், இதுவரை 94.71% சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்ககளுக்கு, அவரவர் ரேஷன் கடைகளில் இருந்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளுமாறு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த 9-ம் தேதியில் இருந்து குடும்ப அட்டை ஒன்றுக்கு, ரூ.1000 ரொக்கமும், 1கி பச்சரிசி, சர்க்கரை, கரும்புத்துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. … Read more

மோசடி மன்னன்.! உஷார் மக்களே ராணுவ அதிகாரி எனக் கூறி ‘OLX-ல்’ அரங்கேற்றிய திருட்டு.!

இணைய தளமான OLX ல் பிரமிள் குமார் என்பவர் ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகக்  கூறி போலி அடையாளத்தை காட்டி ராணுவ பைக் விற்க இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார். இதை நம்பி பாலமுருகன் என்பவர் பைக்கை வாங்குவதற்கு முயன்று கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் பணம் எடுத்தாக மோசடி செய்த போலி ராணுவ வீரர் மீது புகார் அளித்துள்ளார். இதை அவர் உட்பட 8 பேரை ஏமாத்தியுள்ளார் என தெரிய வந்தது. ஆன்லைன் விற்பனை தளமான OLX-ல் … Read more

கொள்ளையடித்த பணத்தை வீதியில் தூக்கி எரிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய தாடி வைத்த முதியவர்.!

அமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்த தாடி வைத்த டேவின் வெயின் முதியவரை போலீசார் கைது செய்தனர். அடித்த பணத்தை வெளிய வந்த கையோடு எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே ஹாப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்துகள் தெரிவித்தார். அமெரிக்காவின் வயதான வெள்ளை தாடி வைத்த முதியவர் ஒருவர், கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியை நோட்டமிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் கொள்ளையடித்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை … Read more

பணபட்டுவாடா திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு..!

நாங்குநேரி தொகுதியில் உள்ள மூலக்கரை பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் திமுகவினர் வீட்டை வாடகைக்கு எடுத்து பணப்பட்டுவாடா செய்ததாக ,அதற்கு ஏற்றார் போல வாக்காளர் பட்டியல் தயார் செய்தததாகவும் கூறிப்படுகிறது. அப்பொழுது பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்ட திமுகவினர் அப்பகுதி மக்கள் சிறைபிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த  தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் நாங்குநேரியில் முறைகேடாக … Read more

பார்வையற்றவர்களுக்காக ரூபாய் நோட்டுகளை கண்டு பிடிக்க செயலி !

பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தாலும் இன்னமும் பணத்தின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. 2018-ம் ஜூன் மாதத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க சில வழிகளை திட்டமிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.இந்தியாவில்  80 லட்சம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் உள்ளனர். ரூபாய் நோட்டுகளில் இண்டாகிலியோ  பிரிண்டிங் மூலம் பணத்தின் மதிப்பை காண குறிகள் அச்சடிக்கப்பட்டன.ஆனால் இந்த … Read more

பணத்தை திருடிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்த திருடன்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு அருகில் காரில் இருந்து 2லட்சம் ரூபாய் பணத்தை திருடிய திருடன் துள்ளி குதித்து செல்லும் காட்சிகள் வெளியானது. ஜோதியம்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் குண்டடம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க சென்றார். அப்பொழுது அவரின் காரில் இருந்த 2லட்சம் பணத்தை காணவில்லை. அதிர்ந்து போன அவர் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்த பொது, பணத்தை கொள்ளை அடித்த திருடன், பணம் … Read more