வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும் – அண்ணாமலை

எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் உள்ளது. விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் பாதுகாப்பதுபோல் தெரிகிறது என 200 நாட்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீடித்து வரும் நிலையில், தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை … Read more

பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்புக்கும், ஜிஎஸ்டி வழக்கில் அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு – அமைச்சர்

வரி விதிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என அமைச்சர் தகவல். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு … Read more

அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்ய ரூ.66 கோடியில் ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ..!

பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்ய ரூ.66 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து இரண்டு மணி நேரமாக பேசி வருகிறார்.அப்போது பேசிய அமைச்சர், “2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும் எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக … Read more

பெட்ரோல், டீசல் வரியில் 50 பைசாவை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது – பிடிஆர்

பெட்ரோல், டீசல் வரியில் மத்திய அரசுக்கே பெரும்பங்கு என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான வரி ரூ.12ல் இருந்து ரூ.32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.31.50-ஐ மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 50 பைசாவை மட்டும் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கிறது என குற்றசாட்டியுள்ளார். மேலும், முறைகேடு தவறு, நிர்வாக திறமையின்மை … Read more

ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை.. மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிவு!!

ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை என்று வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்! ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை, கார்ப்பரேட் நிறுவனம், செல்வந்தர்கள் தான் பயனடைகின்றனர். வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது என தெரிவித்தார். வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? ஜீரோ வரி என்பது அர்த்தமற்ற நடைமுறையாக உள்ளது என குறிப்பிட்டார். சரியான வரியை சரியான நபர்களிடம் வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மாநில … Read more

நிதியமைச்சர் கொடுத்த அதிர்ச்சி… ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,976 கடன் சுமை!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள ஒவ்வொரு துறை வாரியாகவும், வருவாய், இழப்பு குறித்து அமைச்சர் ஸ்லைடு ஷோ போட்டு காட்டி விளக்கம் அளித்து அவருகிறார். அப்போது, 2011-16ல் அதிமுக ஆட்சியில் … Read more

சற்று நேரத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்… முதல்வருடன் நிதியமைச்சர் ஆலோசனை!!

வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சருடன், நிதித்துறை அமைச்சர் பி டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை. தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 11.30 வெளியிடுகிறார். இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலினுடன், நிதித்துறை அமைச்சர் பி டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, இன்று … Read more