#Breaking: தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம்!

தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரின் இடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்கல்வத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிலையில், தற்பொழுது கூடுதலாக அமைச்சர் அன்பழகனும் வேளாண்மைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, #Breaking: தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம்! வேளாண் அமைச்சராக இருந்து துரைக்கண்ணு உயிரிழந்த நிலையில், அவருக்கு இடத்தை கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கீடு!#RIPDuraikannu | #KPAnbalagan @KPAnbalaganoffl pic.twitter.com/Fy2mqsusAB … Read more

அரசு மரியாதையுடன் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம்

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார்.அமைச்சரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.மேலும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் பின்பு அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை ராஜகிரிக்கு வந்தடைந்தது. வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கண்ணுவின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் … Read more

அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு வந்தடைந்தது

அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தடைந்துள்ளது. தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார்.எனவே அமைச்சரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை ராஜகிரிக்கு வந்தடைந்தது. வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கண்ணுவின் உடல் மக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது.பின்பு அமைச்சருக்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

#BREAKING : அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  தமிழக வேளாண்த் துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு … Read more

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் – மு.க.ஸ்டாலின்

அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனாவால் … Read more

அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகரிப்பு..!

தமிழகத்தில் தற்போது வேளாண் துறை அமைச்சராக உள்ள துரைக்கண்ணு ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளது.