பணமோசடி வழக்கு.! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பணமோசடி வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .  அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பணத்தை பெற்றுக்கொண்டு சிலருக்கு வேலை வாங்கி கொடுத்ததாக கூறி அவர்மீது பணமோசடி வழக்குப்பதிவு எய்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இவர் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். இந்த … Read more

ஆதார் இணைத்தால் இலவச மின்சாரம் ரத்து.? மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!

சரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என உபயோகிப்பாளர் கணக்குகளை சரிபார்க்க மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. – அமைச்சர் செந்தில் பாலாஜி.  மழைக்காலத்தில் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் சென்னையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மீட்டர் வரையில் மட்டுமே மின்சாரத்துறை பொறுப்பு. அதற்கு பிறகு உரிமையாளர்கள் தான் ஜாக்கிரதையாக தங்கள் வீட்டில் மின் சாதனங்களை கட்டமைக்க வேண்டும். என குறிப்பிட்டார். மேலும், சென்னையில் இதுவரை 3000க்கும் … Read more

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் திடீர் திருப்பம்.! தங்களையும் சேர்த்துக்கொள்ள அமலாக்கத்துரை விருப்பம்.!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.   கடந்த 2011 – 2015 வரையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி. இவர் அதிமுகவில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என அமைச்சர் செந்தில் பாலாஜி … Read more

Breaking:இனி தேரோட்ட வீதிகளில் புதைவட மின்கம்பி – அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால்,11 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.மேலும்,இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,களிமேடு தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு,பிரதமர் மோடி,அதிமுக, திமுக சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.அதே சமயம்,தஞ்சையில் தேர் சப்பரம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து,தேர் விபத்து … Read more

விவசாயிகளுக்கான இழப்பீடு – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல். உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டதில் இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதனிடையே பேசிய அமைச்சர், மதுபானம் பார் டெண்டர் விவகாரத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை, வெளிப்படைத்தன்மையுடன் தான் டெண்டர் கோரப்பட்டது. டாஸ்மாக் பார் டெண்டர் … Read more

ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த ஒரே அரசியல்வாதி தங்கமணி தான் – அமைச்சர் செந்தில் பாலாஜி

டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே சிங்கை நேரில் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை. மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மின்துறை தொடர்பாக 12 கோரிக்கைகளை கொண்ட மனுவை வழங்கினார். அதில், மின்சார சட்டத்தில் திருத்தும் கொண்டுவர முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் இருந்து 237.63 … Read more

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் – அமைச்சர் செந்தில் பாலாஜி!

 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இன்று முதல் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

“பேரன்பின் உருவமாய் நம் தலைவர் இருக்கும்போது,இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது” – அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னை:பேரன்பின் உருவமாய் நம் தலைவர் இருக்கும்போது, இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இன்று இரண்டாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். அதன்பின்னர்,பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம்,வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பார்வையிட்ட முதல்வர்,இன்று துறைமுகம்,ராயபுரம்,ஆர்கே நகர் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.குறிப்பாக,துறைமுகம் பகுதியில் கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை பார்வையிட்ட முதல்வர் … Read more

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செந்தில் பாலாஜி

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை. தமிழகத்தில் மதுபான கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்குள் மதுபானங்கள் விலைப்பட்டியல் வேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும், சென்னை கொருக்குப்பேட்டையில் மருத்துவமனை, பள்ளி அருகே … Read more

#BREAKING: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

டாஸ்மாக் மதுபான ஊழியர்களுக்கு தலா ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவிப்பு. இன்று தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதன்படி, 2021 ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு … Read more