மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!

மிலாதுன் நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.  நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி திருநாளை அனுசரித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமிய பெருமக்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

மீலாது நபி ! தலைவர்கள் வாழ்த்து

மீலாது நபி திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்த வாழ்த்து செய்தியில், முகமது நபி பிறந்த நாளையொட்டி இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து  செய்தியில்,  நபிகள் நாயகத்தின் எண்ணங்களான நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வு அதிகரிக்கட்டும், சமுதாயத்தில் அமைதி … Read more