2 ஆண்டுகளுக்கு பிறகு…வெகு சிறப்பாக தொடங்கிய மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்!

மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மதுரை மல்லி மற்றும்  மீனாட்சி அம்மன் கோவில்தான்.அந்த வகையில்,ஆண்டு தோறும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை நிகழ்வையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலத்தில் காணப்படும். இந்நிலையில்,சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்வை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  தேரோட்டம் வெகு சிறப்பாக சற்று முன்னர் தொடங்கியுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தேர் திருவிழாவானது பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 53 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படும் தினசரி சாயரட்ச கட்டளை பூஜை..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதீன மடம் சார்பில் நடத்தப்படும் தினசரி சாயரட்ச கட்டளை பூஜை நாளை முதல் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், தினசரி சாயரட்சை காலத்தில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் அபிஷேகம் செய்தல் மற்றும் நெய்வேத்திய கைங்கரியம் சாயரட்சை கட்டளை மதுரை ஆதீனகர்த்தரால் 1968 வரை நடத்தப்பட்டு வரப்பட்டுள்ளது. அதன் பின்னர் 53 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் மதுரை … Read more

மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தீவிபத்து நடந்த பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு!

அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தீவிபத்து நடந்த மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் ஆய்வு நடத்தினர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மீனாட்சி அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தீ விபத்து நடந்த கிழக்கு சுவாமி சன்னதி வாயிலை தவிர்த்து அனைத்து வாயில்கள் வழியாக பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலிலும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், இந்துசமய அறநிலையத்துறையினர், தொல்பொருள்துறையினர், தடயவியல் … Read more