2.3 அடி உயரமுள்ள மனிதனுக்கு திருமணம்..! பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு அழைப்பு..!

நீண்ட நாள் தேடலுக்கு பின், 2.3 அடி உயரம்கொண்ட அசீம் மன்சூரிக்கு வரும் 7-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.  உத்தரப்பிரதேச ஷாமிளி மாவட்டத்தில் உள்ள கைரான பகுதியில் வசித்து வருபவர் அசீம் மன்சூரி. இவருக்கு வயது 27. இவர் 2.3 அடி உயரம் மட்டுமே உள்ளார். இவர் தனது சிறு வயது முதலே கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில், 5-ஆம் வகுப்புடன் தனது படிப்பை முடித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து அவர், தனது சகோதரர்கள் நடத்திய அழகு … Read more

மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திருமணம்..!

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று வந்த, மகேந்திரன்-தீபா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில், மகேந்திரன் என்பவரும், தீபா என்ற பெண்ணும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெற்றது. மகேந்திரன்-தீபா தம்பதியருக்கு மனநல காப்பகத்திலேயே வார்டு மேற்பார்வையாளர் பணி … Read more

மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளாத காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்…! டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம்

மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்ட காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ்க்கு டிஜிபி ஆறுதல் கடிதம்.  காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ், தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்டதால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், அதிகாரி சந்தனராஜ் அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும்,  அதில் கலந்துகொள்ள … Read more

43 ஆண்டுகளில் 53 முறை திருமணம் செய்து கொண்ட நபர்!

ஒரு நிலையான நிலையை பெறுவதற்க்க்காக 43 ஆண்டுகளில் 53 முறை திருமணம் செய்து கொண்ட சவுதி அரேபிய நபர். சவூதி அரேபிய சேர்ந்த நபர் ஒருவர் 53 முறை திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவது, நிலையான நிலைக்காவும் மற்றும் மன அமைதியைக் காணும் நோக்கத்துடன், தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல என கூறுகிறார். 63 வயதான அபு அப்துல்லா, “நூற்றாண்டின் பலதார மணம் செய்பவர்” என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் கூறுகையில், “முதலில் எனக்கு 20 வயது இருக்கும் … Read more

கல்யாணமானாலும் கிரிக்கெட் விளையாட -அனுப்பனும் நண்பனுக்காக அக்ரீமெண்ட் போட்ட நண்பர்கள்..!

திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் மணமகளிடம் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்.  மதுரையை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் மதுரையில் கோலாகலமாக திருமணம்  நடைபெற்றது. மணமகன் ஹரி பிரசாத் கிரிக்கெட்  கொண்டவர். இந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு வந்த ஹரிபிரசாத்தின்  நண்பர்கள், திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ரூ.20 பத்திரத்தில் மணமகள் பூஜாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.

மெசேஜ் அனுப்பி காதலனை அழைத்த மணப்பெண்… தாலி கட்டுவதை தடுத்து தர்ம அடி வாங்கிய சம்பவம்.!

சென்னையில், தனது திருமணத்தன்று காதலனுக்கு மெசெஜ் செய்ததால், காதலன் வந்து தாலி காட்டியதை தடுத்து நிறுத்தியதால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.  சென்னை தண்டையார் பேட்டையில் ஒரு திருமண வைபோகம் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த சமயம் வந்த ஒரு இளைஞன் திடீரென தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனை கண்ட மணப்பெண்ணின் சகோதரர் உட்பட உறவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரித்து உள்ளனர். அதில், அந்த இளைஞர், மணப்பெண்னின் காதலர் சதீஸ் … Read more

“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல” – கேரளா உயர்நீதிமன்றம்..

“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல”. தவறான உறவுமுறையில் ஈடுபட்டுள்ள கணவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிர்க்க விரும்பினால், தற்போதைய உறவை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் கூறியது. விவாகரத்து கோரிய கணவன், 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தங்களின் திருமண உறவு சுமூகமாக இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு, அவரது மனைவி தனக்கு தவறான நடத்தையில் தொடர்பு இருப்பதாகக் கூறி … Read more

ஆண்கள் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும்…! மீறினால் சிறை தண்டனை..!

ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ளது எரித்திரியாவில் ஆண்கள் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். மீறினால் சிறை தண்டனை. ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ளது எரித்திரியா நாடு. இந்த நாட்டில் அடிக்கடி போர் ஏற்படுவது வழக்கம். இதனால், அங்கு ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், அங்கு பெண்கள் பலர் திருமணமாகாமல் உள்ளனர். இதனால் அந்த நாட்டில் புதிய சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு 2 … Read more

குட்நியூஸ்…மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு சர்ப்ரைஸ் – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களால் 2021 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் “மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும்,மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து,இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் அனைத்து திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் மற்றும் திருக்கோயில்களுக்கு … Read more

இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது – பாஜக முன்னாள் துணை மேயர்

சோலோகேமி  திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன் என பாஜக முன்னாள் துணை மேயர் சுனிதா சுக்லா தெரிவித்துள்ளார்.  குஜராத்தில் உள்ள பரோடா பகுதியை சேர்ந்த பெண் சாமா பிந்து. இவருக்கு வயது 24. இவர் எம்எஸ் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பட்டம் பெற்றுள்ளார். இந்த  நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் ஜூன் 11ஆம் தேதி நடைபெற உள்ள தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இவரது  திருமணத்தில் … Read more