இன்று இரவு 8 மணிக்கு மேல் தடை – சென்னை காவல்துறை எச்சரிக்கை!

இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது சென்னை காவல்துறை. சென்னை கடற்கரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 … Read more

வேகம் அதிகரிப்பு! சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 12 லிருந்து 13 கிலோ மீட்டராக அதிகரிப்பு என வானிலை மையம் தகவல்.  சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 200 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு.. மாற்று வசதி! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாதையை நாளை திறப்பு வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதியை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறப்பு வைக்கிறார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவிப்பில், சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை நாளை திறந்து வைக்கப்பட உள்ளது. விரைவில் பெசன்ட் நகரிலும் சிறப்பு பாதைக்கான பணிகள் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளது. மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்கான … Read more

கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர்.!

மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறக்கப்படுகிறது.  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு ஜெயலிலதா சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. லேடி வில்லிங்டன் கல்லூரியில் பெயர் மாற்றப்பட்ட ஜெயலலிதா வளாகத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். அக்கல்லுரில் உள்ள உயர்கல்விமன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர்சூட்டி திறக்கப்படவுள்ளது. ஜெயலலிதா சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் அண்ணா பல்கலைகழகம் மாணவர்கள் … Read more

திறந்தது மெரினா.,அனுமதி வழங்கிய அரசு.,நாளை முதல் பொதுமக்கள் செல்லலாம்.!

கொரோனாவால் மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட மெரினா, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக நாளை முதல் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க சுற்றுலாத் தலங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதில் மெரினா கடற்கரையும் மூடப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், மெரினா கடற்கரையை மட்டும் திறக்காமல் அரசு காலம் கடத்தியது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை அரசு … Read more

#ChennaiRains : கடல் போல் காட்சியளிக்கும் மெரீனா கடற்கரையின் சுற்று வட்டாரம்.!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் மெரினா கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 150கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 220கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் , அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த அதிதீவிர புயல் … Read more

#BREAKING: மெரினா திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு – தமிழக அரசு..!

மெரினா மீன் அங்காடிகளை முறைபடுத்துவது, சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்குகள் வழக்குகள் விசாரணை கடந்த 11-ம் தேதி   உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மெரினா திறப்பது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அப்போது , நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என  தமிழக அரசு தெரிவித்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் மெரினா திறப்பது குறித்து சென்னை மாநகராட்சியும், தமிழக அரசு விரைவில்  முடிவு எடுக்கவேண்டும். மேலும், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் … Read more

#BREAKING: மெரினா திறப்பதில் தாமதம் ஏன்.? தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.!

மெரினா மீன் அங்காடிகளை முறைபடுத்துவது, சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்குகள் வழக்குகள் விசாரணை இன்று  உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மெரினா திறப்பது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அப்போது , நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லைஎன  தமிழக அரசு தெரிவித்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் மெரினா திறப்பது குறித்து சென்னை மாநகராட்சியும், தமிழக அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றமே தலையிட்டு பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு … Read more

#BREAKING: நவம்பர் முதல் மெரினாவிற்கு செல்ல அனுமதி..?

நவம்பர் முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மெரினா சுத்தம், பாதுகாப்பபு மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் அதுவரை மெரினா திறக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்ததது. அப்போது , சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையரும், சென்னை … Read more