நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள், இது சோகமான நாள்- மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்திற்கு வரமுடியாததால் மன்னிப்பு கேட்ட மோடிக்கு, நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தன் தாயார் மறைவால் மேற்கு வங்கத்திற்கு நேரில் வர முடியவில்லை என்பதற்காக மோடி, மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தயவுசெய்து கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார். இது உங்களுக்கு சோகமான நாள், உங்கள் அம்மா என்றால் எங்களுக்கும் அவர் அம்மா தான். உங்களது பணி தொடர, அந்த கடவுள் உங்களுக்கு … Read more

மேற்கு வங்க ஆளுங்கட்சி பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு.! அடையாளம் தெரியாத 2 உடல்கள் மீட்பு.!

மேற்கு வாங்க ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் மரணம் என தகவல் வெளியாகியுள்ளது.  மேற்கு வங்க மாநில ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புர்பா மேதினிபூர் பகுதி பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில் நேற்று இரவு குண்டுவெடிப்பு நடந்ததாக  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவாரேல் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக பிரிவினைவாதத்தை தூண்டி விடுகிறது.! மே.வங்க முதல்வர் மம்தா கடும் தாக்கு.!

மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளில் ராஜ்பன்ஷிகள் மற்றும் கூர்க்காக்கள் இடையே பிரச்சனைகளை பாஜக ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பிரிவினைவாதத்தை பாஜக தூண்டுகிறது. – மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி விமர்சனம்.  குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாஜக பிரச்சாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் … Read more

நாளை அதிகாரம் இல்லாத போது.. காதை பிடித்து இழுத்து வருவோம்.! பாஜகவுக்கு சவால் விட்ட மம்தா பேனர்ஜி.!

ஆட்சி அதிகாரம் இல்லாத போது, இதே விசாரணை அமைப்புகள் நாளை உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் காதுகளை பிடித்து வெளியே இழுத்து வரும் நாள் விரைவில் வரும் என மம்தா பேனர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் நாடு முழுவதும் சோதனை நடத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகள், அலுவலகங்களில் சோதனை செய்து பலரை கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இந்த சம்பவம் … Read more

மம்தா பானர்ஜி துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பினால் முதல்வர் நாற்காலியை விட்டு வெளியேற வேண்டும்.!

செவ்வாயன்று, மேற்கு வங்கத்தில் TMC அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக நடத்திய  ‘நபன்னா சலோ’ போராட்ட ஊர்வலத்தின் போது, ஏற்பட்ட வன்முறை மோதல்களில் காவல்துறை அதிகாரிகள், பாஜக ஆதரவாளர்கள் என பலர் காயமடைந்தனர். ‘நபன்னா சோலோ’ பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பினால் அவர் முதல்வர் நாற்காலியை விட்டு வெளியேற … Read more

#Breaking : யாருக்கும் ஆதரவு இல்லை.. மம்தா பேனர்ஜி அதிரடி அறிவிப்பு.!

துணை குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் , மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.  குடியரசு தலைவர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் நாட்டின் புதிய குடியரசு தலைவர் யார் என தெரிந்துவிடும். திரௌபதி முர்மு தான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என வரும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more

முதல்வர் மம்தா வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்.. பங்களாதேஷ் உடன் தொடர்பு.. 11 சிம்கார்டு… திடுக்கிடும் தகவல்கள்…

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரிடம் இருந்து 11 சிம்கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் பிகார், ஜார்காண்ட் மாநிலங்கள் மட்டுமின்றி, பங்களாதேஷுக்கும் போன் கால் பேசியுள்ளது அம்பலமாகியுள்ளது.  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தங்கியுள்ள வீட்டிற்குள் கடந்த வாரம் ஒரு மர்ம நபர் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த மர்ம நபரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அந்த மர்ம நபர் கடந்த வாரம் முதல் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் … Read more

கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை… மம்தா பானர்ஜி அறிவிப்பு.!

தமிழில் உயிரின் உயிரே, அப்படி போடு, அண்டங்காக்கா கொண்டக்காரி,நினைத்து நினைத்து உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். அதாவது, 53 வயதான பிரபல பாடகர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள நெரிசலான நஸ்ருல் மஞ்ச் ஆடிட்டோரியத்தில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது உடல்நிலை சரியில்லாமல் சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும்போதே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாரடைப்பால் … Read more

#BREAKING: காங்கிரஸ் விரும்பினால் 2024 தேர்தலில் இணையலாம்- மம்தா பானர்ஜி..!

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இந்நிலையில், … Read more

#BREAKING: மேற்கு வங்கத்தில் புதிய கட்டுப்பாடு.. கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில அரசு உத்தரவு!

கொரோனா பரவல் அதிகப்பு காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில அரசு உத்தரவு. மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பல்கலைகழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படவும் ஆணையிட்டுள்ளது. உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் ஜிம்கள் & ஸ்பாக்கள் நாளை … Read more