தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன – கமல்ஹாசன்

விலை உயர்வை கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது என அக்கட்சி தலைவர் ட்வீட். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன. … Read more

திருப்பூர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தற்கொலை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை. திருப்பூர் மாநகராட்சி 36-ஆவது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. தேர்தல் செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 ஓட்டுகள் மட்டும் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறவில்லை என்பது … Read more

உள்ளாட்சி தேர்தல் – வரும் 26ம் தேதி ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 26-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 26-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்ய மாநில, மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனிடையே, தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை … Read more

புளியந்தோப்பு விவகாரம்: “மூவர் கூட்டணியின் முக்கோண ஊழல்” ஓபிஎஸ்-க்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் தொடர்பு – ம.நீ.ம

ஊழலுக்கு ஒத்துழைத்த உயர்மட்ட அரசு அதிகாரிகள் கண்டிக்கப்பட என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோரிக்கை. அந்த அறிக்கையில், நமது மாநிலம், குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தரமற்ற கட்டுமானப் பணிகளால், உச்சபட்ச ஊழலால் ஏழை மக்களின் நம்பிக்கை நொறுங்கிப் போயுள்ளது. உயிராவது மிச்சமாகுமா என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியக் … Read more

மக்களின் வாழ்வை அழித்துத்தான் நிகழவேண்டும் என்றால், அது பிள்ளைக்கறி கேட்பதற்கு ஒப்பானது – கமல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரழிவை உருவாக்கும் திட்டங்களும், தொழிற்சாலைகளும் ஏன் வளரும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன? என ஒரு செனட் சபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ‘மூன்றாம் உலக நாடுகளில்தான் உயிர்களின் விலை மலிவானது’ என்று பதில் வந்தது. ஐரோப்பாவில் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் ஒரு திட்டம் வரும் என்றால் அதற்கு மிகப்பெரிய … Read more

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது – கமல்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம். சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டியிருந்தது. அதுவும், முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் … Read more

இது வெள்ளை அறிக்கை இல்லை, மஞ்சள் கடுதாசி – கமல்ஹாசன்

இது வெள்ளை அறிக்கை இல்லை, மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் என கமல்ஹாசன் ட்வீட். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் வரவேற்றும் வருகின்றனர். அதிமுக தரப்பில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை திசை திருப்பவே பொய்யான தகவல்களை திமுக வெளியிட்டுள்ளது … Read more

கிராம சபை நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு வழங்கிய கமல்ஹாசன்!

கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு தந்துள்ளோம். இதுபோன்று தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்து வருகின்றனர் என கூறினார். ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக … Read more

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – கமல்ஹாசன்

குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது. இந்த திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. இந்த நிலையில், … Read more

நாங்கள் தான் முதலில் சொன்னோம்.. இப்போ முதலமைச்சர் அதனை சொல்லியிருப்பது மகிழ்ச்சி – கமல்ஹாசன்

தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனும் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல்ஹாசன் ட்வீட். சென்னை கிண்டியில் நட்சத்திர விடுதியில் நேற்று ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரூ.28,508 கோடி மதிப்பில், மொத்தம் 49 திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் இவ்விழாவில் பேசியா முதல்வர், தமிழ்நாடு முதலீட்டார்களின் முதல் முகவரியாக மாறவேண்டும் என்றும் நிச்சியம் மாறும் எனவும் தெரிவித்தார். … Read more