#BREAKING : சிறையில் தந்தை, மகன் மரணம்! தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சிறையில் மரணமடைந்த சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவர் அறிக்கையின் பேரிலும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக பிறப்பிக்க  உள்ள உத்தரவின் … Read more

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? கனிமொழி

சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் முதல்வர் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி அருகே உள்ள சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? உயிரிழந்த … Read more

சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் ! தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறைத்துறை ஏடிஜிபி சம்பவம் தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக … Read more

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் முறையீடு

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர், ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ் .31 வயதான பென்னிக்ஸ் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். போலீசார் விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் சிறையில் இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் … Read more

#BREAKING : தந்தை, மகன் உயிரிழப்பு -டிஜிபி ஆஜராக உத்தரவு

கோவில்பட்டி சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கில் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 2 எஸ்ஐகளை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும், இன்று … Read more

நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் -ஸ்டாலின்

நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்  என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அருகே சிறையில்  தந்தை மற்றும் மகன்  உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தை கண்டித்து சாத்தான்குளம் பகுதியில் போராட்டம் நடத்தினார்கள். இதனை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், சாத்தான்குளத்தில் காவல்துறை அழைத்துச் சென்ற ஜெயராஜ் அவரது மகன் பென்னீக்ஸ் இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? உள்துறையைக் கையில் வைத்திருக்கும் … Read more

சிறையில் உயிரிழந்த தந்தை,மகன்..மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.!

தூத்துக்குடி அருகே சிறையில்  தந்தை மற்றும் மகன்  உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் தமிழக … Read more

#Breaking: தந்தை-மகன் உயிரிழப்பு.. தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு!

கோவில்பட்டி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர். இதனையடுத்து, கோவில்பட்டி கிளைச்சிறையில்  2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். இந்நிலையில், இந்த சம்பவம் காரணமாக, தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும் என என தமிழ்நாடு வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்தார். … Read more

தூத்துக்குடி அருகே சிறையில் உயிரிழந்த தந்தை மற்றும் மகன் !

தூத்துக்குடி அருகே சிறையில்   தந்தை மற்றும் மகன்  உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர், ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ் (31) பென்னிக்ஸ்  செல்போன் கடை நடத்தி வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை கடந்த 20-ம் தேதி ஜெயராஜ் திறந்து தொடர்பாக போலீஸ் அவரை எச்சரித்தனர். மேலும், இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜெயராஜ் … Read more