வரலாற்றில் இன்றுதான் இந்தியாவிலிருந்து கடைசி பிரிட்டிஷ் படைகள் வெளியேறின…!!

வரலாற்றில் இன்று – பிப்ரவரி 28, 1948 – இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் படைகள் முற்றிலுமாக வெளியேறின. 1947 – ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா விடுதலை ஆனபோதும் இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படைகள் உடனடியாக வெளியேறவில்லை. இந்தியாவின் பாதுகாப்பிற்கான பொறுப்பை முழுமையாக இந்தியாவின் சுயேச்சை ராணுவம் ஏற்றுக்கொள்ளும் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த . பிரிட்டிஷ் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. கடைசி குழு (Last Batch ) வெளியேறிய தினம் 1948, பிப்ரவரி 28 ஆகும்.