தென் தமிழகத்தில் ஒருசில இடத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆராச்சி மையம் தெரிவித்துள்ளது.

நாகர்கோவிலில் ஷோரூம் கதவை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை..!

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 32). இவர் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் பிரபல செல்போன் நிறுவனம் ஒன்றின் செல்போன்கள் விற்பனை செய்யும் ஷோரூமை நடத்தி வருகிறார். அதில் ரூ.6500 முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விலைகொண்ட ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு சுதாகர் வழக்கம் போல் ஷோரூமை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் திறக்க வந்தபோது ஷோரூமின் … Read more

நாகர்கோவிலில் மாணவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது விழாவில் கலெக்டர் வேண்டுகோள்..!

தமிழகம் முழுவதும் கடந்த 23-ந் தேதி முதல் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்கினார். நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், தமிழ்நாடு … Read more

பெண் கொலை வழக்கை நேர்மையான போலீஸ் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு!

பூதப்பாண்டியை அடுத்த அழகியபாண்டியபுரம் அருகே உள்ள எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 48). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி அதிகாலை வீட்டில் தனியாக இருந்த லலிதா கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அவருடைய கணவர் இளையபெருமாளும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். … Read more

நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி கடைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை..!

நாகர்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி சாலையில் சிலர் இறைச்சி கடைகள் நடத்தி வருவதாகவும், அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் மாடு மற்றும் பன்றி வெட்டப்பட்டு இறைச்சி விற்கப்படுவதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகளை அகற்றவும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை விற்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நகர்நல அலுவலர் கின்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதேவன் … Read more

கன்னியாகுமரியில் குலசேகரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு!

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை, இடைக்கட்டான் கரையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுஜித் (வயது20). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடி வந்தார். சரியான வேலை கிடைக்காததால் தற்போது கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் குலசேகரம் நோக்கி புறப்பட்டார். மங்கலம் பகுதியில் சென்ற போது, எதிரே குலசேகரத்தில் இருந்து பொன்மனை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் … Read more