சந்தேகத்தால் காதலியை கொன்ற 25 வயது இளைஞன் …!

குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டாடேபூர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 25 வயது இளைஞன் 23 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். அப்பொழுது வேறொரு ஆணிடமிருந்து அந்த பெண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளைஞன் தனது காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம்  முற்றி, அவர்களுக்குள் பிரச்சனை வளர்ந்ததால் அந்த இடத்தில் … Read more

மெக்சிகோ காட்டுத்தீ – 2 பேர் பலி ; 200 வீடுகள் சேதம்..!

மெக்சிகோவில் உள்ள சியாரா பிளாங்கா எனும் மலைத்தொடரில் உள்ள காட்டுப்பகுதியில் 5,000 ஏக்கருக்கும் அதிகமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உயிரிழந்தவர்கள் வயதான தம்பதிகள் எனவும், அவர்கள் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்தால் 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றிற்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி!

ஆந்திராவில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியதில் 9 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி பகுதியில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏலூர் அருகேயுள்ள பாலத்தைக் கடந்த பொழுது, பேருந்து கவிழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை – மத்திய அரசு!

போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் திட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் பலனாக தற்பொழுது வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட … Read more

இந்தோனேசியா : எரிமலை வெடித்து 13 பேர் உயிரிழப்பு ….!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எனும் எரிமலை 3,617 மீட்டர் உயரம் கொண்டது. இந்த எரிமலையிலிருந்து நேற்று லேசாக புகை கிளம்பியுள்ளது. இதனையடுத்து இன்று எரிமலை திடீரென வெடித்து சாம்பல் புகை உயரமாக சென்று, காற்றில் கலந்துள்ளது. இந்த  எரிமலை வெடிப்பு காரணமாக அதன் அருகே இருந்த வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் ஒரு பாலமும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்த பொழுது ஒருவர் … Read more

லாரி மீது மோதிய கார் : 18 பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்!

பனிமூட்டம் காரணமாக கார் ஒன்று கற்கள் சுமந்து நின்ற லாரி மீது மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நடியா எனும் மாவட்டத்தில்உள்ள ஹன்ஸ்காலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையோரம் கற்களை சுமந்தவாறு லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது அவ்வழியே வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் சக்தி நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் … Read more

மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சரக்கு ரயில் மோதி உயிரிழப்பு …!

மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சரக்கு ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா எனும் பகுதியில் வசித்து வரும் கவுரவ் குமார் மற்றும் கபில் குமார் எனும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் இருவரும் ஆன்லைன் விளையாட்டாகிய பப்ஜி விளையாடிக் கொண்டே வெளியில் சென்றிருந்த பொழுது சரக்கு ரயில் மீது மோதி பரிதாபமாக இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மதுராவிலிருந்து லட்சுமி நகர் செல்லும் தண்டவாள … Read more

கேரளாவில் கனமழை : குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழப்பு!

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 2 குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சூர், எர்ணாக்குளம், இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வெள்ள பாதிப்பால் பல இடங்களில் பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதுடன், உயிர் … Read more

ராஜஸ்தான் : பேருந்து மீது மோதிய டேங்கர் லாரி – 12 பேர் உயிரிழப்பு!

பேருந்து மீது டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை டேங்கர் லாரி ஒன்று பேருந்து மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் 12 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், காலை 9:55 மணியளவில் பலோத்ராவிலிருந்து இருந்து பேருந்து … Read more

உத்தரகாண்ட் கோர விபத்து : 12 பேர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் எனும் இடத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து மீட்பு படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த சக்ராத் பகுதி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு … Read more