கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேர் கைது …!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஆயிஷா என்ற கல்லூரி மாணவி நேற்று கல்லூரி முடிந்து தரமணி பறக்கும் ரயில் நிலையத்திற்கு வந்த போது பார்த்த ரயில்வே ஊழியர்கள் யோகேஷ் , லூகாஸ் மற்றும்  ஸ்ரீராம் ஆகியோர் சேர்ந்து மிரட்டி ஆயிஷாவை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக ஆயிஷா அளித்த புகாரின் பேரில் ரயில்வே ஊழியர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை கோவில் தொடர்பாக வன்முறை…. கேரள ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவு….!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தும் முயற்சியில் கடந்த வாரத்தில் இரண்டு பெண்கள் போலீசார் பாதுகாப்புடன் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தனர். இதையடுத்து கேரளாவில் கண்ணூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில் கேரளாவில் தற்போதைய சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேரள ஆளுநர் பி. சதாசிவத்திடம் அறிக்கை … Read more

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு…

கேரளாவில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்தின் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. சபரிமலையில் கபிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வன்முறையாக வெடித்தது.இந்த வன்முறையில் பாஜக தொண்டர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.பல இடங்களில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டு பதற்றம் ஏற்பட்டு வருகின்றது.மகரவிளக்கு பூஜை நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்து அமைப்புகள் போராட்டம் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது…!!

அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம்…தமிழக முதல்வர் உறுதி..!!

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான  அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது  என்று, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற  சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் , அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். அணைகள்  பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை வேறு மாநிலத்தில் இருந்தால் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக் காட்டிய முதலமைச்சர், முல்லைபெரியாறு உள்ளிட்ட அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக … Read more

ஐயப்பன் கோவிலில்10 பெண்கள் வழிபாடு…கேரள போலீஸ் கொடுத்த ரிப்போர்ட் ..!!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோவிலில்  10 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க. தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதையடுத்து சபரிமலையை சுற்றியுள்ள இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிந்து, … Read more

சபரிமலை விவகாரத்தால் பிரதமர் மோடியின் கேரள பயணம் தள்ளிவைப்பு?

சபரிமலை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் கேரள வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை வர இருந்தார். மீண்டும் 27 ஆம் தேதி கேரள வரும் அவர் திருச்சூர், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டப்பட்டிருந்தது. சபரிமலையில் 2 பெண்கள் வழிபட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பெரும்பாலான பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1,369 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த … Read more

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட மாநில ஆளுநர் சதாசிவம் அறிவுறுத்தல்…!!

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அம்மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிவுறுத்தியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலின் மரபில் இருந்து மாறுபட்டு, அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதற்கிடையே அண்மையில் 2 பெண்கள் சுவாமிதரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோரை அம்மாநில போலீசார் … Read more

கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேர் கைது…!!

சபரிமலைக்கு 2 இளம்பெண்கள் பெண்கள் சென்ற விவகாரத்தில், கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சபரிமலைக்கு சென்ற 2 இளம்பெண்கள், அங்கு ஐயப்பனை தரிசனம் செய்தனர். இது, பாஜக மற்றும் இந்து அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கேரளாவில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், மூணாறில், வியாபாரிகள் மற்றும் வியாபார சங்கங்கள், கடைகள் திறக்கப்படும் என … Read more

கேரளாவில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக : பினராயி விஜயன்….!!

இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தற்காக கோயிலின் நடை அடைக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தார். மேலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு காவல் துறைக்கு உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார். இதனை முன்னிறுத்தி மாநிலத்தில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பினராயி விஜயன் … Read more

கேரளாவில் பா.ஜ.க சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி…!!

சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ததை கண்டித்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு சார்பில் கேரளாவில் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்றது. சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததைக் கண்டித்து, பல்வேறு இந்து அமைப்புகள் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலை பாரம்பரியத்தை காப்பாற்ற தவறிவிட்டதாக கூறி பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்று வருகிறது. பேரணியில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவாறு … Read more