மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் மதுபானம் வழங்கலாம்-கேரள முதல்வர் !

இந்தியா முழுவதும் 21 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்துதல் என்பதை கடைபிடித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநிலத்திலும் மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கேரளா மாநிலத்தில் மதுபானம் கிடைக்காததால் 3 பேர்  தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தது. இதனையடுத்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு மதுபானம் வழங்கலாம் என்று அறிவித்துள்ளார் .