மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்  கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என 523-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன இதில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொதுக் கலந்தாய்வு மூலம் நடப்பாண்டு ஆண்டு நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் 26ந்தேதி ஆன்லைன் … Read more

அரியர் தேர்வு: நீதிமன்ற உத்தரவின்படி முடிவு – அமைச்சர் அன்பழகன்.!

நீதிமன்றம் உத்தரவின்படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இறுதி நாளான இன்று தமிழக சட்டபேரவையில், அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் இல்லையா என்று அரசு விளமளிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்,  நீதிமன்றம் உத்தரவின்படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அரியர் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வு எழுதவே தயாராக … Read more

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2 ஆக பிரிப்பு – சட்ட மசோதா தாக்கல்.!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை அண்ணா அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள … Read more

டிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. தமிழகத்தில் கடந்த மாதம் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து உயர்கல்வியில் சேர சேர்வதற்காக ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இன்றுடன் டிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அக பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் … Read more

புதிய கல்விக் கொள்கை..உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை.!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை நடத்துகிறார்  கடந்த ஆண்டு ஜூன் 01-ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிடப்பட்டது.இதன்மீது ஜூன் 30-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை வரைவுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது. மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை  புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. … Read more

#BREAKING: இன்று மாலை 6 மணி முதல் இன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்.!

பொறியியல் மாணவர் சேர்க்கை இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு காலதாமதமாகி உள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையும் தள்ளி போகிறது. இதனால், தமிழகத்தில் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்..? என்று கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில், … Read more

அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது – மியாட் மருத்துவமனை

அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.ஆனால் இதற்கு அமைச்சர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.    இதனிடையே  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது என்று  மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.இந்நிலையில் … Read more

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே செமஸ்டர் தேர்வுகள்.!

கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்தும் அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினர் கூறி வந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் … Read more

கொரோனா போனாதான் கல்லூரிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பழகன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் நீங்கிய பிறகே கல்லுரிகள் திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தை விட்டு கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பயம் இல்லை என்ற நிலை வந்த பிறகே கல்லூரிகளை திறப்பதில் தமிழக அரசு உறுதியாகவுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லுரிகளில் கிருமிநாசினி தெளித்து, தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார். கல்லூரிகளில் தற்போது … Read more

பிப். 29ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்- திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு.!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் பிப்ரவரி 29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு.  திமுக கழக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கழக நாடாளுமன்ற கூட்டம் வரும் பிப்ரவரி 29-ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது கழக மக்களவை மற்றும் மாநிலவை உறுப்பினர்களை தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் … Read more