உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம் -குடியரசுத் தலைவர் உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். வருகின்ற நவம்பர் 17-ஆம் தேதியுடன் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக ஏஸ்.ஏ பாப்டேவை நியமிக்க ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.நவம்பர் 18-ஆம் தேதி முறைப்படி பதவி ஏற்றுக்கொள்கிறார் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே.