90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு

90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2012ம் ஆண்டு முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள், செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டியிருந்தன. அதன்படி, ‘தி இந்து’ நாளிதழின் ஆசிரியர் … Read more