ஆந்திராவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு..! இன்று முதல் தொடக்கம்.!

Caste Census Andhra Pradesh

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல்கள் அதிகமாக ஒலிக்க ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவை அந்நாட்டு மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டும் விட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல்… வாக்காளர்களுக்கு துரோகம்.! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.!  அதேபோல, மற்ற மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அந்தந்த மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் … Read more

வெள்ளத்தால் பாதித்த ஆந்திரா.. சேத பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஜெகன் மோகன்…

வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று சேத பாதிப்பை பார்வையிட்டார்.  வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது  தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடாக்கு  அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த … Read more

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி.! ஆந்திர முதல்வர் அதிரடி.!

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் ஆந்திராவில் 36,221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 365 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 16,464 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அந்த … Read more

முக்கிய முடிவில் மாற்றம் காணுமா திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம்.?!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தானமாக பெறப்பட்ட நிலங்களை விற்கும் முடிவை பரிசீலனை செய்யுமாறு ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலிலுக்கு பக்தர்கள் தானமாக நிலங்களை கொடுப்பது வழக்கம். அப்படி பெறப்பட்ட நிலங்களை விற்க தேவஸ்தானம் முடிவு செய்தது.  இந்த முடிவை பரிசீலனை செய்யும் படியும், அதுவரையில் நிலம் விற்கும் முடிவை கைவிடும்படியும் ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  மத குருக்கள், பக்தர்கள், ஆன்மீகவாதிகளின் அறிவுறுத்தலை பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்த்ர்கள் தானம் செய்த நிலத்தில் … Read more

விஷ வாயு தாக்கி 8 பேர் பலி.! மீப்பு குழுவினருடன் பிரதமர் தீவிர ஆலோசனை.!

விஷவாயு தாக்கி ஆந்திராவில் 8 பேர் பலியான விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விஷவாயு ஒன்று வெளியானது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனை எழுந்தது.  இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக … Read more

போலிஸாரின் காலில் விழுந்து வணங்கிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கும் போது, பொதுமக்களின் நலனுக்காக இரவு பகல் பார்க்காமல் கொரோனாவுடன் போராடி வருகின்றனர் நமது மருத்துவர்கள். அதேபோல கொரோனா பொதுமக்களிடம் பரவாமல் காவல்துறையினரும் அயராது உழைத்து வருகின்றனர்.  இதனை கௌரவிக்கும் வகையில் ஆந்திர மாநிலத்தில் காவல்துறையினரின் காலில் விழுந்து ஒருவர் வாங்கியுள்ளார். ஆந்திர மாநிலத்தை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏ செட்டி பால்குனா ஆந்திர … Read more

பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 3 வாரத்திற்குள் கடும் தண்டனை! ஆந்திர முதல்வர் அதிரடி!

ஆந்திரா சட்ட பேரவையில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை 3 வாரத்தில் முடித்து குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி.  இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அதில் சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் போலீஸ் விசாரணையின் போது தப்பிக்க … Read more

லஞ்சம் கேட்டால் உடனே 14400 என்ற நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்! அதிரடி முதல்வரின் அடுத்த திட்டம்!

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார். மதுபான கடைகள் குறைப்பு, மதுபான பார் லைசென்ஸ் கட்டணம் கடுமையாக உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அடுத்த அதிரடியாக ஆந்திர மாநிலத்தை லஞ்சம் இல்லாத மாநிலமாக உருவாக்க தற்போது புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் … Read more

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்! காவலர்களுக்கு அறை, சிசிடிவி கேமிரா என பணிகள் தீவிரம்!

அண்மையில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதே போல சந்திர பாபு நாயுடு மகனுக்கு மாவோயிஸ்ட் மிரட்டல், செம்மரகடத்தல் கும்பல்களின் மிரட்டல் இருந்ததால் கொடுக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. … Read more