ஜெ.தீபா அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் – அமைச்சர் ஜெயகுமார் பேச்சு!

ஜெ. தீபா அவர்கள் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொள்ளலாம் என்று  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு, ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபா அவர்கள் எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்  என்ற தனி கட்சி ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று திடீரென தான் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க போவதாக அறிவித்தார். இது தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் … Read more

” நான் விலாங்கு மீன் இல்லை டால்பின் ” அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு….!!

தமிழக பட்ஜெட் சட்ட பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து இன்று சட்ட பேரவை இன்று தொடங்கியது. இன்றைய சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.குறிப்பாக ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் மீது நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடைபெற்றது.இந்நிலையில் இன்று சட்ட சபையில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நான் விலாங்கு மீன் இல்லை. டால்பின் மனிதர்களுக்கு வழிகாட்டும் டால்பின் மீனைப் போல இருப்பேன் என்று தெரிவித்தார்.